(1311)
கானார் கரிகொம் பதொசித்த களிறே,
நானா வகைநல் லவர்மன் னியநாங்கூர்,
தேனார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆனாய், அடியேனுக் கருள்புரி யாயே.
பதவுரை
|
கான் ஆர் கரி கொம்பு அது ஒசித்த களிறே |
– |
காட்டிலே வளர்ந்து கொழுப்படைந்திருந்த (குவலயாபீடமென்னும்) யானையினுடைய தந்தங்களை முறித்தொழித்த யானைபோல் செருக்குற்ற பெருமானே! |
|
நானாவகை நல்லவர் |
– |
(குலம் கல்வி முதலிய) பலவகைகளினால் நன்மை பெற்றவர்கள் |
|
மன்னிய |
– |
பொருந்திவாழ்கிற |
|
நாங்கூர் |
– |
திருநாங்கூரில் |
|
தேன் ஆர் பொழில் சூழ் |
– |
தேன் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட |
|
திருவெள்ளக் குளத்துள் |
– |
திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற |
|
ஆனாய் |
– |
ஆனை போன்றவனே |
|
அடியேனுக்கு அருள்புரியாய் |
– |
அடியேன் மீது கிருபை பண்ணவேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கானார் கரி – கம்ஸனுடைய யானை ராஜதானியில் வளர்ந்ததாயிருக்க, அதனைக் காட்டில் வளர்ந்ததாகச் சொல்லுவதற்குக் கருத்து யாதெனில்; காட்டில் வேண்டினபடி தினறு, வேண்டினபடி திரிந்து கொழுப்படைந்த யானைபோலே கொழுத்துக்கிடந்தது என்பதாம்.
English Translation
O Lord who pulled out the tusk of an elephant, Residing in Nangur with many learned ones! Nectared fruit orchards –Tiruvellakulam Lord! Elephant! Relieve me of my karmic misery.
