(1310)
குன்றால் குளிர்மா ரிதடுத் துகந்தானே,
நன்றா யபெரும் புகழ்வே தியர்நாங்கூர்
சென்றார் வணங்கும் திருவெள்ளக் குளத்துள்
நின்றாய், நெடியாய் அடியே னிடர்நீக்கே.
பதவுரை
|
குளிர்மாரி குன்றால் தடுத்து |
– |
(திருவாய்ப்பாடியை) வவ்வலிடப்ப பண்ணின மழையைக் கோவர்த்தன மலையினால் தடைசெய்து |
|
ஊகந்தானே |
– |
திருவுள்ளம் மகிழ்ந்தவனே! |
|
நன்று ஆய பெரு புகழ் வேதியர் |
– |
விலக்ஷணமான மிக்க கீர்த்தியையுடைய வைதிகர்கள் வாழ்கிற |
|
நாங்கூர் |
– |
திருநாங்கூரில் |
|
சென்றார் வணங்கும் |
– |
வருவார் போவாரெல்லாரும் வணங்கப்பெற்ற |
|
திருவெள்ளக்குளத்துள்; |
||
|
நின்றாய் |
– |
நின்றருள்கின்ற |
|
நெடியாய் |
– |
ஸர்வேச்வரனே!, |
|
அடியேன் இடர் நீக்கு |
– |
அடியேனுடைய துன்பங்களைப் போக்கியருள். |
English Translation
Lord who lifted the mountain to stop the rains, Residing in Nangur amid the famous seers! Pilgrimage centre-Tiruvellakulam Lord! Ancient one! Rid me of my karmic misery.
