(1309)
கொந்தார் துளவமலர் கொன்ட ணிவானே,
நந்தாத பெரும்புகழ் வேதியர் நாங்கூர்,
செந்தா மரைநீர்த் திருவெள்ளக் குளத்துள்
எந்தாய்,அடியே னிடரைக் களையாயே.
பதவுரை
|
கொந்து ஆர் துவளம் மலர் கொண்டு அணிவானே |
– |
பூங்கொத்துக்கள் நிறைந்திருக்கிற திருத்துழாய் மலர்களை அணிந்துகொண்டிருக்குமன்னே!, |
|
நந்தாத பெரு புகழ் வேதியர் நாங்கூர் |
– |
ஒருநாளும் குறையாத பெரிய புகழையுடையரான வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரில், |
|
செந்தாமரை நீர் |
– |
செந்தாமரைப் பூக்களையுடைய நீர்நிலைகளையுடைத்தான |
|
திருவெள்ளக் குளத்துள் |
– |
திருவெள்ளக்குளத்தி லெழுந்தருளியிருக்கிற |
|
எந்தாய் |
– |
என் ஸ்வாமியே! |
|
அடியேன் இடரை களையாய் |
– |
அடியேனுடைய துன்பங்களை ஒழித்தருளவேணும். |
English Translation
O Lord with hue like the dark of the deep ocean, Residing in Nangur Victoriously won! Temple of high walls, -Tiruvellakulam Lord! Elder, pray rid me of my karmic misery.
