(1308)

(1308)

கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,

நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,

திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்

அண்ணா,அடியே னிடரைக் களையாயே.

 

பதவுரை

கண் ஆர் கடல் போல் திருமேனி கரியாய்

இடமுடைத்தான கடல்போலே திருமேனி கறுத்திருக்கப்பெற்றவனே!

நண்ணார் முனை

சத்துருக்களுடைய யுத்தத்திலே

வென்றி கொள்வார்

வெற்றிபெறுமவர்களான அந்தணர்கள்

மன்னு

வாழ்கிற

நாங்கூர்

திருநாங்கூரில்

திண் ஆர் மதிள் சூழ்

திடமான மதிளாலே சூழப்பட்ட

திருவெள்ளக்குளத்துள்

திருவெள்ளக்குளமென்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற

அண்ணா

அண்ணனே!

அடியேன் இடரை களையாய்

அடியேனுடைய துன்பங்களை ஒழித்தருள வேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவெள்ளக்குளம் என்கிற புஷ்கரிணியின் திருநாமமே திவ்யதேசத்திற்கும் திருநாமமாக வழங்கலாயிற்று.  ‘அண்ணன் கோயில்’ என்று ப்ரஸித்தி.

 

English Translation

O Lord with hue like the dark of the deep ocean, Residing in Nangur Victoriously won! Temple of high walls, -Tiruvellakulam Lord!  Elder, pray rid me of my karmic misery.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top