(1305)
ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று,
காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்,
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக்,
காவளம் பாடி மேய கண்ணனே களைக ணீயே.
பதவுரை
|
இள கன்னிக்கு ஆகி |
– |
இளம்பெண்ணாகிய ஸத்யபாமைப் பிராட்டிக்காக |
|
ஏவு இமையவர் கோனை செற்று |
– |
யுத்தத்திலே தேவேந்திரனைப் பங்கப்படுத்தி |
|
கடிது கா வளம் இறுத்து |
– |
சீக்கிரமாக நந்தவனத்தின் அழகை அழித்து |
|
கற்பகம் |
– |
கல்பவ்ருக்ஷத்தை |
|
கொண்டு போந்தாய் |
– |
(த்வாரகையில்) கொண்டு வந்து நட்டவனே!, |
|
பூவளம் பொழில்கள் சூழ்ந்த |
– |
புஷ்பங்களின் வளம்பொருந்திய சோலைகளாலே சூழப்பட்டதாய் |
|
புரந்தரன் செய்த |
– |
இந்திரனால் ஏற்படுத்தப்பட்டதான |
|
நாங்கை |
– |
திருநாங்கூரில் |
|
காவளம்பாடி மேய கண்ணனே! |
||
|
நீயே களை கண் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஏவிளங்கன்னிக்காகி – ஏவு – ‘இந்தப் பாரிஜாத விருக்ஷத்தை என் வீட்டு முற்றத்தில் கொண்டு நட்டுவிடு’ என்று ஏவின, இளங்கன்னிக்காகி – என்று முரைக்கலாம்.. அம்மரத்தைக் கருடனைக்கொண்டு போருமளவில் இந்திரன் அஃதறிந்து வஜ்ராயுதத்தைத் தீட்டிக்கொண்டு போர்புரிய வந்து பங்கப்பட்டுப் போயினன் என்பதும் இங்கு அறியத்தக்கது. அதுதோன்ற “இமையவர் கோனைச் செற்று” எனப்பட்டது.
புரந்தரன் செய்த நாங்கை – ஸ்வர்க்க லோகத்திற்கு உண்டான ஏற்றம் பூலோகத்திற்கு முண்டாகவேணும் என்று கருதின தேவேந்திரன் ஸ்வர்க்கலோகத்துக் கட்டளையாகவே திருநாங்கூரை அமைத்தனன் என்று ஒரு இதிஹாஸ முண்டென்பர். புரந்தான் – வடசொல்
English Translation
O, Krishna! For the sake of the young Dame satyabhama, you subdued Indra, and transferred his garden-beauty wishing free kalipaka to her garden. You reside amid groves filled with fragrant flowers verily laid out by Purandara, Indra, in Nangur’s Kavalampadi, you are my sole refuge!
