(1304)
மூத்தவற் கரசு வேண்டி முன்பு தூதெழுந் தருளி,
மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பொ சித்தாய்,
பூத்தமர் சோலை யோங்கிப் புனல்பரந் தொழுகும், நாங்கைக்
காத்தவனே காவ ளந்தண் பாடியாய் களைக ணீயே.
பதவுரை
|
முன்பு |
– |
முன்பொருகால் |
|
மூத்தவற்கு அரசு வேண்டி தூது எழுந்தருளி |
– |
பாண்டவர்களில் தலைவனான தருமபுத்திரனுக்கு ராஜ்யமளிக்க விரும்பித் தூது சென்றவனாய், |
|
மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய் |
– |
மத்தகத்தின் மீது பொருந்தியிருந்த பாகனானவன் விழுந்து முடியும்படி (குவலயா பீடமென்னும்) மத யானையினுடைய தந்தங்களை முறித் (து அந்த யானையை ஒழித்)தவனே! |
|
பூத்து அமர் சோலை ஓங்கி |
– |
புஷ்பித்து (வரிசையாகப்) பொருந்தியிருக்கிற சோலைகளானவை உயர்ந்து வளர்ந்திருக்கப் பெற்றதும் |
|
புனல் பறந்து ஒழுகும் |
– |
ஜலமானது (அச்சோலைகளைச் சுற்றி) வியாபித்து பாயா நிற்கப்பெற்றதுமான |
|
நாங்கை, காவளந்தண்பாடியாய்; |
||
|
காத்தனே |
– |
ரக்ஷகனே!, |
|
நீயே களைகண் |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மாத்தமர்பாகன் – ‘மஸ்தகம்’ என்னும் வடசொல் ‘மத்தகம்’ எனத் திரிந்து அது ‘மாத்து’ எனச் சிதைந்தது. மதகரி – வடசொல் தொடர்.
English Translation
O, Krishna! you upheid the elder brother’s right to the throne and plied as a messenger, you killed the rutted elephant and the manhout, you reside where swirling waters make the groves grow tall in Nangur’s Kavalampadi. You are my sole refuge!
