(1262)

(1262)

சாடு போய்விழத் தாள்நிமிர்த் தீசன்தன் படையொடுங் கிளையோடும்

ஓட வாணனை யாயிரந் தோள்களும் துணித்தவ னுறைகோயில்,

ஆடு வான்கொடி யகல்விசும் பணவிப்போய்ப் பகலவ னொளிமறைக்கும்

மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புரு டோத்தமமே.

 

பதவுரை

சாடு கோய் விழ

(அஸுரனால் ஆவேசிக்கப்பட்ட) சகடமானது விழுந்தொழியும்படி

தாள் நிமிர்த்து

திருவடிகளைத் தூக்கினவனாயும்

ஈசன் தன் படையோடும் கிளையோடும் ஓட

ருத்ரன் தனது ஸேனைகயோடும் சுற்றத்தாரோடும் தோற்று ஓடிப்போகும் படியானவளவில்

வாணனை

பாணாஸுரனை

ஆயிரம் தோள்களும்

ஆயிரந் தோள்கயையும்

துணித்தவன்

அறுத்தொழித்தவனாயுமுள்ள பெருமான்

உறை கோயில்;

ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய்

அசையாநின்ற பெரிய த்வஜங்கள் பரந்த ஆகாசத்தைத் தழுவி உயரக்கிளம்பி

பகலவன் ஒளி மறைக்கும்

ஸூர்யனுடைய பிரதாபத்தை மறையச்செய்யப்பெற்ற

மாடம் மாளிகை சூழ்தரு நாங்கூர்

மாடங்களினாலும் மாளிகைகளினாலும் சூழப்பட்ட திருநாங்கூரில்

வண்புருடோத்தமம்

 

English Translation

The Lord who smote the devil-cart with his foot, then cut the thousand arms of Bana and put his retinue to flight, resides of Nangur, -where pennons on mansion-top penetrate the sky and stop the Sun’s ascent, -in the temple of van-purushottamam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top