(1200)
நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நெடுமால்,தன்
தாராய நறுந்துளவம் பெருந்தகையெற் கருளானே,
சீராரும் வளர்ப்பொழில்சூழ் திருவாலி வயல்வாழும்,
கூர்வாய சிறுகுருகே குறிப்பறிந்து கூறாயே.
பதவுரை
|
நீர்வானம் மண் எரி கால் ஆய் நின்ற நெடுமால் |
– |
பஞ்ச பூதங்களுக்கு நிர்வாஹகனா யிருக்கிற ஸர்வேச்வரன் |
|
தன் தார்ஆய நறு துளவம் |
– |
தன்னுடைய மாலையாகிய மணம்மிக்க திருத்துழாயை |
|
பெரும் தகையேற்கு அருளானே |
– |
மிகவும் தகுதியையுடையளான எனக்கு கொடுத்தருள்கின்றானில்லையே; |
|
சீர்ஆரும் |
– |
சீர்மை பொருந்திய |
|
வளர் பொழில் சூழ் |
– |
வளர்கின்ற சோலைகளாலே சூழப்பட்ட |
|
திரு ஆலி |
– |
திருவாலிமாநகரில் |
|
வயல் வாழும் கூர்வாய சிறு குருகே |
– |
கழனியிலே வாழ்கின்ற கூர்மையான வாயலகையுடைய சிறிய கொக்கே! |
|
குறிப்பு அறிந்து |
– |
(திருவாலி யெம்பெருனானுடைய) திருவுள்ளக் கருத்தை அறிந்து கொண்டு வந்து (எனக்குச்) சொல்லிவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சோலை வாய்ப்புப் பொருந்திய திருவாலியின் கழனிகளிலே மேய்ந்து வாழ்கின்ற சிறு குருகே, எல்லாப் பொருள்களும் தானேயாய் நிற்கிற ஸர்வேக்வரனான வயலாகி மணவாளன் தனது திருத்துழாய்மாலையை எனக்கு அருள் செய்கின்றிலன்; (அதாவது-மார்பிலிணிந்துள்ள மணமாலை என்கொங்கைத்தடத்தில் நெருக்குண்ணும்படி வந்து ஸம்ச்லேஷிக்கின்ளானில்லை.) அவனுடைய திருவுள்ளம் என்மேல் மாறிவிட்டதோ அறியேன்; நீ சென்று அவனது திருவுள்ளத்தைத் தெரிந்துகொண்டு வந்து எனக்குச் சொல்லவேணும்; நானொருத்தியிருக்கிறேனென்கிற நினைவோடேயிருந்து இவ்விடம் வருவதாக இருக்கிறானா? அல்லது, இத்தலையை மறந்தேயொழிந்தானா? அபிப்ராய மிருக்கும்படியை அறிந்து கொண்டுவந்து எனக்குச் சொல்லாய் என்கிறாள்.
குறிப்பறிந்து கூறாய்=அவனுடைய திருவுள்ளத்தை யறிந்து வந்து என்னிடம் சொல்லு என்ற பொருள்தவிர, மற்றொரு பொருளும் சொல்லலாம்; அதாவது-நான் உனக்குத் தாதுசொல்லும் வார்த்தையை அவனிடஞ்சென்று திடீரென்று சொல்லிவேண்டுமாதலால் அந்தக் குறிப்புத் தெரிந்துகொண்டு என் வார்த்தையை அவனிடம் சொல்லு என்பதாம்.
இரண்டாமடியில், “பெருந்தகையேற்கு” “பெறுந்தகையேற்கு” என்பன பாட பேதங்கள். இரண்டு பாடமும் பொருந்தும் பிந்தன பாடத்தில் , திருத்துழாயைப் பெறுவதற்குத் தகுதியுடையளான எனக்கு அருள் செய்கின்றானில்லையே என்று பொருள் கொள்க.
English Translation
Water, Sky, the Earth, Fire and Wind, -being all these, he is Lord above all. He denies his Tulasi wreath to my asking-weeping-self. He resides in Tiruvali amid fertile watered groves. O, Pecking-sharp beak-crane, learn what he intends for me.
