(1183)

(1183)

பைங்கண்விறல் செம்முகத்து வாலி மாளப் படர்வனத்துக் கவந்தனொடும்  படையார்த்திண்கை,

வெங்கண்விறல் விராதனுக விற்கு னித்த விண்ணவர்க்கோன் தாளணைவீர், வெற்புப்போலும்

துங்கமுக மாளிகைமே லாயங் கூறும்துடியிடையார் முகக்கமல்ச் சோதி தன்னால்,

திங்கள்முகம் பனிபடைக்கு மழகார் காழிச் சீராம விண்ணகரே சேர்மி னீரே.

 

பதவுரை

பைங் கண் விறல் செம் முகம் வாலி மாள

பசுமை தங்கிய கண்களையும் மிடுக்கையும் (கோபத்தாற்) சிவந்த முகத்தையுமுடைய வாலியென்னும் வாநர ராஜன் முடியும்படியாகவும்.

படர் வனத்து கவந்தனொடும் திண் படை ஆர்கை வெம் கண் விறல் வீராதன் உக

பரந்த காட்டிலுள்ள கபந்தனென் பவனும் திடமான   ஆயுதங்கள் நிறைந்த கைகளையும் உக்ரமான கண்களையும் வலிமையையுமுடைய விராதனெ ன்பவனும் முடியும்படியாகவும்

வில் குனிந்த

வில்லை வனைத்து (அம்புகளைப் பிரயோகித்த)

விண்ணவர் கோன்

தேவாதி தேவனுடைய

தாள் அணைவீர்

திருவடிகளையடைய விரும்புமன்பர்களே!;-

வெற்பு போலும் துங்கம் முகம் மாளிகை மேல் ஆயம் கூறும்

மலை போன்று உயர்ந்த முகத்தையுடைய மாளிகைகளின்  மேல் நிலத்திலே நின்று ஸ்நேஹமாகப் பேசிக் கொண்டிருக்கிற

துடி இடையார்

உடுக்கை போன்று நுண்ணிய இடையையுடைய மாதர்களது

கமலம் முகம் சோதி தன்னால்

தாமரை போன்ற முகத்தின் காந்தியினாலே

திங்கள் முகம் பனி படைக்கும்

சந்திரனுடைய முகத்திலே வருத்தமுண்டாக்கப் பெற்ற

அழகு ஆர்காழி ………. சேர்மின்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (வெற்புப் போலு மித்யாதி.) – சந்திர மண்டலத்தளவும் ஓங்கியுள்ள மாடங்களின் மீது  மாதர்கள் ஒருவர்க்கொருவர் தோழமை கொண்டாடி வார்த்தையாடாநிற்கையில் அவர்களுடைய முகச் சோதியைப் பார்த்துச் சந்திரன் “ இவர்கள் முன்னே நாம் பிழைக்கிற பிழைப்பு ஒரு பிழைப்பா! என்று வெள்கி வருந்துகின்றானென்ற விதனால் – இத்தலத்து மாட மாளிகைகள் மிகவும் ஓங்கி விளங்குகின்றன வென்பதும், இத்தலத்து மாதர்கள் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் என்பதும் பெறுவிக்கப்பட்டனவாம்.

துங்கம் – வடசொல், உந்நதமானது, ஆயம் – தோழி, தோழமை, பனி – அச்சம், துக்கம், நடுக்கம்.

 

English Translation

Green eyed and red faced Vali was killed; deep in-the-forest-dwelling Kabanda too fell. One eyed demon Viradha too fell to the bow of our Lord and master who rules the celestials. Mountain-like mansions in Kali rise high, thin waisted girls in the balconies call, putting to shame the face of the full moon, dazzle in Seerama Vinnagar, O People, go to!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top