(1095)
பெண்ணாகி யின்னமுதம் வஞ்சித்தானைப் பிறையெயிற்றன் றடலரியாய்ப் பெருகினானை,
தண்ணார்ந்த வார்ப்புனல்சூழ் மெய்யமென்னும் தடவரைமேல் கிடந்தானைப் பணங்கள்மேவி,
என்ணானை யெண்ணிறந்த புகழினானை இலங்கொளிசே ரரவிந்தம் போன்றுநீண்ட
கண்ணானை, கண்ணாரக் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பதவுரை
|
பெண் ஆகி
|
– |
மோஹினி யுருவமெடுத்து |
|
இன் அமுதம் வஞ்சித்தானை |
– |
இனிய அமிருத்தை (அசுரர்கள் புஜிக்கவொண்ணாதபடி) வஞ்சித்தவனும் |
|
அன்று |
– |
முன்பொரு காலத்தில் |
|
பிறை எயிறு |
– |
சந்திரனை யொத்த பற்களையுடைய |
|
அடல் அரிஆய் |
– |
பலசாலியான நரஸிம்ஹமுர்த்தியாய் |
|
பெருகினானை, |
– |
வளர்ந்தவனும், |
|
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் |
– |
குளிர்த்தி பொருந்திப் பெருகுகின்ற ஜலத்தாலே சூழப்பட்ட |
|
மெய்யம் என்னும் |
– |
திருமெய்யமென்கிற |
|
தடவரைமேல் |
– |
பெரிய திருமலையின்மீது |
|
பணங்கள் மேவி கிடந்தானை |
– |
(திருவனந்தாழ்வானுடைய) படங்களின் கீழே பொருந்திப் பள்ளி கொண்டிருப்பவனும் |
|
எண்ணானை |
– |
(யோகிகளால்) சிந்திக்கப்படுமவனும் |
|
எண் இறந்த புகழினானை |
– |
கணக்கில்லாத கீர்த்திகளையுடையவனும் |
|
இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானை |
– |
மிக்க ஒளியையுடைய தாமரையிதழ்போலே நீண்ட திருக்கண்களையுடையவனுமான எம்பெருமானை |
|
கடி பொழில் சூழ் கடன்மல்லைத் தலசயனத்தே கண் ஆரக் கண்டுகொண்டேன்-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
எண்ணானை என்பதற்கு – எண்ணுகிறவன் என்றும், எண்ணப்படுகிறவன் என்றும், எண்ணாதவன் என்றும் மூன்று வகையாகப் பொருள் கொள்ளலாம்;- எண்ணுகிறவன் என்னும் பொருளில், நம்போன்ற ஸம்ஸாரிகளைக் காத்தருளும் வகையை எண்ணிக்கொண்டிருப்பவன் என்றதாகிறது; எண்ணப்படுகிறவன் என்னும் பொருளில், “நலமந்தமில்லதோர் நாட்டிலே நித்யஸூரிகள் பணியுமாறு இருக்கவேண்டிய பெருமான்; இப்படி ஸம்ஸாரிகளின் நடுவே வந்து கிடப்பதே!, இஃது என்ன நீர்மை!” என்று பக்தர்களால் எண்ணப்படுமவன் என்றதாகிறது; எண்ணாதவன் என்னும் பொருளில், நமது குற்றங் குறைகளை ஒரு பொருளாக இட்டெண்ணாதவன் என்றதாகிறது.
English Translation
He came disguised as a female and denied ambrosia to the Asuras. He came as a crescent-teeth feline. He is the Lord reclining on a hooded serpent amid cool waters in Meyyam. He is the Lord of countless virtues with radiant lotus like eyes. To my heart’s content, amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.
