(1080)
அலமன்னு மடல்சுரி சங்கமெடுத் தடலாழியி னாலணி யாருருவில்,
புலமன்னு வடம்புனை கொங்கையினாள் பொறைதீரமு னாளடு வாளமரில்,
பலமன்னர் படச்சுட ராழியினைப் பகலோன்மறை யப்பணி கொண்டு,அணிசேர்
நிலமன்னனு மாயுல காண்டவனுக் கிடம்மாமலை யாவது நீர்மலையே.
பதவுரை
|
அணி ஆர் உருவில் |
– |
அழகுபொருந்திய திருமேனியிலே |
|
அடல் ஆழியினால் |
– |
தீக்ஷ்ணமான திருவாழியோடு கூட |
|
அலம் |
– |
கலப்பையையும் |
|
மன்னும் அடல் சுரி சங்கம் |
– |
(எதிரிகட்கு) நித்யபயங்கரமான ஸ்ரீ பாஞ்சஜந்யத்தையும் |
|
எடுத்து |
– |
தரித்துக் கொண்டிருப்பவனாயும் |
|
முன் |
– |
முன்னொருகால், |
|
புலம் மன்னுவடம் புனை கொங்கையினாள் |
– |
மநோஹரமான முத்து வடங்களணிந்த முலையை யுடையளான பூமிப் பிராட்டியினுடைய |
|
பொறை |
– |
பாரமானது |
|
தீர |
– |
தொலையும்படி |
|
ஆள் அடு வாள் அமரில் |
– |
ஆண்களை யெல்லாம் முடிக்கிற மஹத்தான யுத்தத்திலே |
|
பல மன்னர் பட |
– |
பல அரசர்கள் நசிக்கும்படி (செய்தவனாயும்) |
|
பகலோன் மறைய |
– |
ஸூர்யன் மறையும்படியாக |
|
சுடர் ஆழியினை பணி கொண்டு |
– |
ஒளிமிக்க திருவாழியைக் காரியங் கொண்டவனாயும் |
|
அணிசேர் நிலம் மன்னனும் ஆய் |
– |
அழகிய இந்நிலத்திற்கு நாயகனாயிருந்துகொண்டு |
|
உலகு ஆண்டவனுக்கு |
– |
உலகங்களை ரக்ஷித்தவனாயுமிருக்கிற பெருமானுக்கு |
|
இடம் |
– |
இருப்பிடம் |
|
மா மலை ஆவது நீர்மலையே-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் பலராமனாகத் திருவவதரித்தபோது கலப்பையை ஆயுதமாகக் கொண்டருளினனென்க. ‘ஹலாயுதன்’ என்றிறே பலராமனது திரு நாமம். கலப்பையென்னும் பொருள்தான் ஹலம் என்ற வடசொல் இங்கு அலமெனத் திரிந்தது.
புலமன்னு வடம்புனை கொங்கையினாள் = திருமடந்தைபோலே மண்மடந்தையும் எம்பெருமானுக்குத் திவய்மஹிஷியாதலால் இங்ஙனே சிறப்பித்து வருணிக்கப்பட்டாள்.
புலம்மன்னுவடம் = கண்ணும் மனமுமாகிற இந்திரியங்கள் வேறு பொருள்களிற் செல்லாது தன்னிடத்திலேயே பொருந்தியிருக்கப் பெற்ற முத்து வடம்; எனவே, மநோஹரமான முத்துவட மென்றதாயிற்று. பாரதயுத்தத்தில் எண்ணிறந்த ஆண்பிள்ளைகள் முடிந்தமை பற்றி ஆளடுவாளமர் எனப்பட்டது.
English Translation
On his beautiful frame he bears a sharp discus, a plough, and a terrible coiled conch. Then is the yore, he came to rid the jeweled Dame Earth of her burden. With his radiant discus he shaded the sun and waged a war in which many kings were killed. As a crowned king he ruled the Earth for many ages. Tirunirmalai His great hill abode.
