(1037)
கண்ணா யேழுலகுக் குயிராய வெங்கார்வண்ணனை*
விண்ணோர் தாம்பரவும் பொழில்வேங்கட வேதியனை*
திண்ணார் மாடங்கள் சூழ் திருமங்கையர்கோன் கலியன்*
பண்ணார் பாடல்பத்தும் பயில்வார்க் கில்லை பாவங்களே
பதவுரை
ஏழ் உலகுக்கு | – | எல்லா வுலகங்களுக்கும் |
கண் ஆய் | – | கண் போன்றவனும் |
உயிர் ஆய | – | உயிர் போன்றவனும் |
எம் | – | எமக்காக |
கார் வண்ணணை | – | மேகம் போன்ற திரு நிறத்தையுடையவனும் |
விண்ணோர் தாம் பரவும்பொழில் வேங்கடம் | – | நித்ய ஸூரிகளும் வந்து துதிக்கப்பெற்ற, சோலை சூழ்ந்த திருமலையிலே |
வேதியதனை | – | வேத ப்ரதிபாத்யனாய் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானைக் குறித்து |
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்கோன் கலியன் | – | திண்ணிய மாடங்கள் சூழ்ந்த திருமங்கையி லுள்ளார்க்குத் தலைவரான கலியன் (அருளிச் செய்த) |
பண் ஆர் பாடல் பத்தும் | – | பண்ணோடு கூடிய இப்பத்துப் பாசுரங்களையும் |
பயில்வார்க்கு | – | ஓதுமவர்களுக்கு |
பாவங்கள் இல்லை | – | பிரதிபந்தங்களெல்லாம் தொலைந்து போம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
#1037
கண் ஆய், ஏழ் உலகுக்கு உயிர் ஆய எம் கார் வண்ணனை;
விண்ணோர்– தாம் பரவும் பொழில் வேங்கட வேதியனை;
திண் ஆர் மாடங்கள் சூழ் திரு மங்கையர்–கோன், கலியன்;
பண் ஆர் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லை, பாவங்களே. [1-9-10]
***[கண்ணாயேழுலகுக்கு.] “கண்ணாவானென்றும் மண்ணோர் விண்ணோர்க்குத், தண்ணார் வேங்கடவிண்ணோர் வெற்பனே” என்றபடி ஏழுலகத்தவர்க்கும் கண்போன்றவனும் உயிர்போன்றவனுமான திருவேங்கடமுடையானைக் குறித்துத் திருமங்கைமன்னனருளிச்செய்த இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்களுக்குப் பாவங்களெல்லாம் பறந்தோடுமென்று இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.
அடிவரவு:- தாய் மான் கொன்றேன் குலம் எப்பாவம் மண் தெரியேன்நோற்றேன் பற்றேல் கண்ணாய் கண்.
ஒன்பதாந்திருமொழி உரை முற்றிற்று.
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
English Translation
The cloud-hued Lord, dear to the seven world, -as eyes and life-breath,–is the Vedic Lord of Tiruvenkatam hills amid groves where even celestials come to offer worship. The strong walled Tirumangai king kaliyan has sung pan-based garland of songs in his paise. Those who master it will become freed of karma.
