(859)
கேடில்சீர்வ ரத்தனாய்க்கெ டும்வரத்த யனரன்
நாடினோடு நாட்டமாயி ரத்தன்நாடு நண்ணிலும்
வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும்
கூடுமாசை யல்லதொன்று கொள்வனோகு றிப்பிலே.
பதவுரை
| கேடு இல் சீர் வரத்தன் ஆம் அயன் |
– |
அழிவில்லாத ஸம்பத்தை யுடையவனாம்படி வரம்பெற்றவான பிரமனென்ன |
| கெடும் வரத்து அரன் |
– |
எல்லாவற்றுக்கும் முடிவை உண்டு பணிணுவனாக வரம் பெற்ற சிவனென்ன (இவர்களுடைய) |
| நாடினோடு கூட |
– |
நாடுகளோடு கூட |
| கூடும் ஆசை அல்லது |
– |
எம்பெருமானோடு சேரவேணும் சேரவேணும் என்று மநோரதத்திருக்கை தவிர |
| நாட்டம் ஆயிரத்தன் நாடு |
– |
ஆயிரங்கண்ணுடைய இந்திரனுடைய நாட்டையும் |
| கண்ணீரும் |
– |
அடையப்பெறுவதாயிருந்தாலும் |
| வீடு ஆனஅது போகம் எய்தி வீற்றிருந்த போதிலும் |
– |
மோக்ஷமாகிய அவ்வநுபவத்தையே பெற்று (ஆநந்தமயமாய்) வீற்றிருக்க பெறுவதானாலும் |
| ஒன்று குறிப்பில் கொள்வனோ |
– |
மற்றொன்றை நெஞ்சினுள் நினைப்பேனோ. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானைக் கிட்ட அனுபவிப்பதிலுங்காட்டில் அவ்வநுபவத்தைப் பற்றின மநோரதமே நித்யமாய்ச் செல்லுமாகில் அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தியுடையவர்களுடைய ஸித்தாந்தம்; அதனை யருளிச் செய்கிறார் இப்பாட்டில். நாட்டம் என்று கண்ணுக்குப் பெயர்; நாட்டமாயிரததன் என்று ஸஹஸ்ராக்ஷனுடைய இந்திரனுக்கு காமதேயமாகிறது. இதனையுணராது, “காடினோடு நாட்டமாய் இரத்தனோடு கண்ணிலும்” என்று ஓதுமவர்களுடைய ஞானப்பெருக்கை என் சொல்வோம்.
English Translation
The world of wealthy Brahma or the wiped-out world of Lord Siva, the kingdom of the thousand eyes that Indra rules in sky above, — If all this and the joy of life in free Heaven he granted me, I still will crave for thee alone, — my only aim, to be with you.
