(859)

(859)

கேடில்சீர்வ ரத்தனாய்க்கெ டும்வரத்த யனரன்

நாடினோடு நாட்டமாயி ரத்தன்நாடு நண்ணிலும்

வீடதான போகமெய்தி வீற்றிருந்த போதிலும்

கூடுமாசை யல்லதொன்று கொள்வனோகு றிப்பிலே.

பதவுரை

கேடு இல் சீர் வரத்தன் ஆம் அயன்

அழிவில்லாத ஸம்பத்தை யுடையவனாம்படி வரம்பெற்றவான பிரமனென்ன
கெடும் வரத்து அரன்

எல்லாவற்றுக்கும் முடிவை உண்டு     பணிணுவனாக வரம் பெற்ற சிவனென்ன (இவர்களுடைய)
நாடினோடு கூட

நாடுகளோடு கூட
கூடும் ஆசை அல்லது

எம்பெருமானோடு சேரவேணும் சேரவேணும் என்று மநோரதத்திருக்கை தவிர
நாட்டம் ஆயிரத்தன் நாடு

ஆயிரங்கண்ணுடைய இந்திரனுடைய நாட்டையும்
கண்ணீரும்

அடையப்பெறுவதாயிருந்தாலும்
வீடு ஆனஅது போகம் எய்தி வீற்றிருந்த போதிலும்

மோக்ஷமாகிய அவ்வநுபவத்தையே பெற்று (ஆநந்தமயமாய்) வீற்றிருக்க பெறுவதானாலும்
ஒன்று குறிப்பில் கொள்வனோ

மற்றொன்றை நெஞ்சினுள் நினைப்பேனோ.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானைக் கிட்ட அனுபவிப்பதிலுங்காட்டில் அவ்வநுபவத்தைப் பற்றின மநோரதமே நித்யமாய்ச் செல்லுமாகில் அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தியுடையவர்களுடைய ஸித்தாந்தம்; அதனை யருளிச் செய்கிறார் இப்பாட்டில். நாட்டம் என்று கண்ணுக்குப் பெயர்; நாட்டமாயிரததன் என்று ஸஹஸ்ராக்ஷனுடைய இந்திரனுக்கு காமதேயமாகிறது. இதனையுணராது, “காடினோடு நாட்டமாய் இரத்தனோடு கண்ணிலும்” என்று ஓதுமவர்களுடைய ஞானப்பெருக்கை என் சொல்வோம்.

English Translation

The world of wealthy Brahma or the wiped-out world of Lord Siva, the kingdom of the thousand eyes that Indra rules in sky above, — If all this and the joy of  life in free Heaven he granted me, I still will crave for thee alone, — my only aim, to be with you.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top