(858)
காய்சினத்த காசிமன்னன் வக்கரன்ப வுண்டிரன்
மாசினத்த மாலிமாஞ்சு மாலிகேசி தேனுகன்
நாசமுற்று வீழநாள்க வர்ந்தநின்க ழற்கலால்
நேசபாச மெத்திறத்தும் வைத்திடேனெம் மீசனே.
பதவுரை
| எம் ஈசனே |
– |
எம்பெருமானே! |
| காய் சினந்த காசிமன்னன் |
|
மஹா கோபியான காசிராஜாவும் |
| வக்கரன் |
– |
(ருக்மினி விவாஹ காலத்தில் வந்து போர் செய்த) தந்தவக்த்ரனும் |
| பவுண்டிரன் |
– |
பௌண்ட்ரக வாஸுதேவனும் |
| மா சினந்த மாலி |
– |
அதிகோபிஷ்டனான மாலியும் |
| மா கமாலி |
– |
மஹானான ஸுலிமாலியும் |
| கேசி |
– |
(குதிரை வடிவங்கொண்டு கொல்ல வந்த) கேசியும் |
| தேனுகன் |
– |
தேநுகாஸுரனும் |
| நாசம் உற்று வீழ |
– |
துக்கத்தையநுபவித்து மாண்டு போம்படியாக |
| நாள் கவர்ந்த |
– |
(அவர்களுடைய) வாழ்நாளை முடித்த |
| நின் |
– |
தேவரீருடைய |
| கழற்கு அலால் |
– |
திருவடிகளுக்குத் தவிர |
| எத்திறந்தும் |
– |
வேறு எவ்விஷயத்திலும் |
| நேச பாசம் |
– |
ஆசாபாசத்தை |
| வைத்திடேன் |
– |
வைக்கமாட்டேன் |
English Translation
The terrible angry Kasiraja, Vakradanta, Poundraka, the raging ones Sumali-Mali, Kesin and one Dhenuka, –you took their lives and rid the world of fear and formidability. My heart is set on you alone, your feet the only Love I know!
