(836)
நச்சராவ ணைக்கிடந்த நாத.பாத போதினில்
வைத்தசிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்
மெய்த்தன்வல்லை யாதலால றிந்தனன்நின் மாயமே
உய்த்துநின்ம யக்கினில்ம யக்கலென்னை
பதவுரை
| நஞ்சு அரா அணை |
– |
(ஆச்ரித விரோதிகள்மேல்) விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வானாகிற சயனத்திலே |
| கிடந்த |
– |
திருக்கண் வளர்ந்தருள்கிற |
| நாத |
– |
ஸ்வேச்வரனே! |
| பாத போதினில் |
– |
(உன்னுடைய) திருவடித் தாமரைகளிலே |
| வைத்த |
– |
(இப்போது) வைக்கப்பட்டுள்ள |
| சிந்தை |
– |
மகஸ்ஸை |
| வாங்குவித்து |
– |
அதில் நின்றும் திருப்பி |
| நீங்குவிக்க |
– |
வேறு விஷயங்களில் போக்க |
| நீ |
– |
ஸ்வதந்த்ரனான நீ |
| இனம் |
– |
இன்னமும் |
| மெய்த்தன் |
– |
மெய்யாகவே |
| வல்லை ஆதல் |
– |
ஸமர்த்தனாயிருக்கிறாய் என்பதை |
| அறிந்தனன் |
– |
அறிந்திருக்கிறேன் |
| மாயனே! |
– |
ஆச்சரியசக்தியுக்தனே! |
| என்னை |
– |
அடியேனை |
| நின் மாயமே உய்ந்து |
– |
உன்னுடைய மாயச்செயலையே கடத்தி |
| மயக்கினில் |
– |
ப்ராக்ருத பாசங்களிலே (வைத்து) |
| மயக்கல் |
– |
மயக்கவேண்டா |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடியேன் விஷயத்திலே எம்பெருமான் திருவுள்ளம் எப்படிப்பட்டதோ வென்று ஸந்தேஹித்தார் கீழ்ப்பாட்டில்; என்னை உன் ஸ்வாதந்திரியத்தினால் ஸம்ஸாரப்படுகுழியிலே இன்னமும் தள்ளாமல் கிருபைபண்ணியருளவேணுமென்று இரக்கிறார். இப்பாட்டில்
English Translation
O Lord reclining on a snake, O Lord with lotus-flowery feet! You have the power to make my thoughts; you have the power to break my thoughts. You are above my consciousness, I know you now, O Maya Lord! Pray do not trap me once again in web of sense-illusion, O!
