(836)

(836)

நச்சராவ ணைக்கிடந்த நாத.பாத போதினில்

வைத்தசிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம்

மெய்த்தன்வல்லை யாதலால றிந்தனன்நின் மாயமே

உய்த்துநின்ம யக்கினில்ம யக்கலென்னை

பதவுரை

நஞ்சு அரா அணை

(ஆச்ரித விரோதிகள்மேல்) விஷத்தை உமிழ்கின்ற திருவனந்தாழ்வானாகிற சயனத்திலே
கிடந்த

திருக்கண் வளர்ந்தருள்கிற
நாத

ஸ்வேச்வரனே!
பாத போதினில்

(உன்னுடைய) திருவடித் தாமரைகளிலே
வைத்த

(இப்போது) வைக்கப்பட்டுள்ள
சிந்தை

மகஸ்ஸை
வாங்குவித்து

அதில் நின்றும் திருப்பி
நீங்குவிக்க

வேறு விஷயங்களில் போக்க
நீ

ஸ்வதந்த்ரனான நீ
இனம்

இன்னமும்
மெய்த்தன்

மெய்யாகவே
வல்லை ஆதல்

ஸமர்த்தனாயிருக்கிறாய் என்பதை
அறிந்தனன்

அறிந்திருக்கிறேன்
மாயனே!

ஆச்சரியசக்தியுக்தனே!
என்னை

அடியேனை
நின் மாயமே உய்ந்து

உன்னுடைய மாயச்செயலையே கடத்தி
மயக்கினில்

ப்ராக்ருத பாசங்களிலே (வைத்து)
மயக்கல்

மயக்கவேண்டா

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடியேன் விஷயத்திலே எம்பெருமான் திருவுள்ளம் எப்படிப்பட்டதோ வென்று ஸந்தேஹித்தார் கீழ்ப்பாட்டில்; என்னை உன் ஸ்வாதந்திரியத்தினால் ஸம்ஸாரப்படுகுழியிலே இன்னமும் தள்ளாமல் கிருபைபண்ணியருளவேணுமென்று இரக்கிறார். இப்பாட்டில்

English Translation

O Lord reclining on a snake, O Lord with lotus-flowery feet! You have the power to make my thoughts; you have the power to break my thoughts. You are above my consciousness, I know you now, O Maya Lord! Pray do not trap me once again in web of sense-illusion, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top