(837)

(837)

சாடுசாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்

ஆடராவின் வன்பிடர்ந டம்பயின்றநாதனே

கோடுநீடு கைய செய்ய பாதநாளு முன்னினால்

வீடனாக மெய்செயாத வண்ணமென்கொல் கண்ணனே.

பதவுரை

சாடு நாடு பாதனே

சகடாஸுரனை உதைத்தொழித்த திருவடியையுடையவனே!
சலம் கலந்த பொய்கை வாய்

(விஷமே அதிகமாகி அத்துடன் சிறிது) ஜலமும் கலந்திருக்கப்பெற்ற ஒரு மடுவிலே
ஆடு அரவின்

(செருக்கினால் படமெடுத்து) ஆடிக்கொண்டிருந்த காளியநாகத்தினுடைய
வன்பிடர்

வலியதான பிடரியிலே
நடம் பயின்ற

நர்த்தனம் செய்த
நாதனே!

ஸ்வாமியே
கோடு நீடு கைய

ஸ்ரீபாஞ்சஜந்யத்தினால்  நித்ராஸங்க்குதாமன திருக்கையையுடையவனே!
கண்ணனே

கண்ணபிரானே!
செய்ய பாதம்

(உனது) செந்தாமரைபோற் சிவந்த திருவடிகளை
நாளும்

நாள்தோறும்
உன்னினால்

அடியேன் தியானித்துக் கொண்டிருக்கும்போது
மெய்

மெய்யாகவே
வீடன் ஆக செயாத வண்ணம் என் கொல்

(அடியேனை) முத்தனாக்காதது ஏனோ!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் விரோதிநிரஸநத்தில் ஸமர்த்தன் என்னுமிடத்தை நிரூபித்துக் கொண்டு இப்படி ஸமர்த்தனான நீ என் விரோதியை மாத்திரம் நிவர்த்திப்பியாமல் உபேக்ஷை பண்ணுவது தகுதியோவென்கிறார். சலம் கலந்த பொய்கை = அப்பொய்கையிலே விஷமே விஞ்சினதென்றும் அத்தோடு கூட ஜலமும் சிறிது சேர்ந்திருக்குமென்றும் உணர்க. வீடன் = வீட்டையந்தவன், முக்தன்.

English Translation

O Lord, you broke the laden cart, O Lord you went into the lake, O Lord, you put your lotus-feet and danced on hoods of snake in it! O Lord you hold a conch in hand, I think about you constantly, and yet you do not make me free, now how come this O Kanna Lord!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top