(837)
சாடுசாடு பாதனே சலங்கலந்த பொய்கைவாய்
ஆடராவின் வன்பிடர்ந டம்பயின்றநாதனே
கோடுநீடு கைய செய்ய பாதநாளு முன்னினால்
வீடனாக மெய்செயாத வண்ணமென்கொல் கண்ணனே.
பதவுரை
| சாடு நாடு பாதனே |
– |
சகடாஸுரனை உதைத்தொழித்த திருவடியையுடையவனே! |
| சலம் கலந்த பொய்கை வாய் |
– |
(விஷமே அதிகமாகி அத்துடன் சிறிது) ஜலமும் கலந்திருக்கப்பெற்ற ஒரு மடுவிலே |
| ஆடு அரவின் |
– |
(செருக்கினால் படமெடுத்து) ஆடிக்கொண்டிருந்த காளியநாகத்தினுடைய |
| வன்பிடர் |
– |
வலியதான பிடரியிலே |
| நடம் பயின்ற |
– |
நர்த்தனம் செய்த |
| நாதனே! |
– |
ஸ்வாமியே |
| கோடு நீடு கைய |
– |
ஸ்ரீபாஞ்சஜந்யத்தினால் நித்ராஸங்க்குதாமன திருக்கையையுடையவனே! |
| கண்ணனே |
– |
கண்ணபிரானே! |
| செய்ய பாதம் |
– |
(உனது) செந்தாமரைபோற் சிவந்த திருவடிகளை |
| நாளும் |
– |
நாள்தோறும் |
| உன்னினால் |
– |
அடியேன் தியானித்துக் கொண்டிருக்கும்போது |
| மெய் |
– |
மெய்யாகவே |
| வீடன் ஆக செயாத வண்ணம் என் கொல் |
– |
(அடியேனை) முத்தனாக்காதது ஏனோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் விரோதிநிரஸநத்தில் ஸமர்த்தன் என்னுமிடத்தை நிரூபித்துக் கொண்டு இப்படி ஸமர்த்தனான நீ என் விரோதியை மாத்திரம் நிவர்த்திப்பியாமல் உபேக்ஷை பண்ணுவது தகுதியோவென்கிறார். சலம் கலந்த பொய்கை = அப்பொய்கையிலே விஷமே விஞ்சினதென்றும் அத்தோடு கூட ஜலமும் சிறிது சேர்ந்திருக்குமென்றும் உணர்க. வீடன் = வீட்டையந்தவன், முக்தன்.
English Translation
O Lord, you broke the laden cart, O Lord you went into the lake, O Lord, you put your lotus-feet and danced on hoods of snake in it! O Lord you hold a conch in hand, I think about you constantly, and yet you do not make me free, now how come this O Kanna Lord!
