(823)

(823)

போதில்மங்கை பூதலக்கி ழத்திதேவி யன்றியும்

போதுதங்கு நான்முகன்ம கனவன்ம கஞ்சொலில்

மாதுதங்கு கூறன்ஏற தூர்தியென்று வேதநூல்

ஓதுகின்ற துண்மையல்ல தில்லைமற்று ரைக்கிலே.

பதவுரை

போதில் மங்கை

பூமகளான லக்ஷிமியும்
பூதலம் கிழத்தி

பூமிப்பிராட்டியும்
தேவி

தேவிமாராவர்;
அன்றியும்

மேலும்
போது தங்குநான் முகன்

பூவிலே பொருந்திருப்பவனான பிரமன்
அவன் மகன்

பேரனாயிரா நின்றான்;
என்று

இவ்வண்ணமாக
வேதம்நூல்

வேத சாஸ்த்ரம்
ஓதுகின்றது

உரைப்பதானது
உண்மை

ஸத்யம்
மகன்

புத்திரனாயிரா நின்றான்;
சொலில்

மேலும் சொல்லப்புக்கால்
மாது தங்கு கூறன்

ஒரு பக்கத்திலே பார்வதி தங்கப் பெற்றவனாய்
ஏறு அது ஊர்தி

எருதை வாஹனமாக வுடையனான சிவன்
மற்று

இங்ஙனன்றிக்கே
அல்லது

இப்படியல்லாத வேறொரு அர்த்தத்தை (சிவபாரம்யத்தை)
உரைக்கில்

(சைவ ஆகமாதிகளைக் கொண்டு) சொல்லப்பார்க்கில்
இல்லை

அது அஸத்யம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய பரத்வஹேதுவான பெருமைகளைப் பேசுகிறார். பூவிலே பிறந்த பெரியபிராட்டியாரும்; ஸ்ரீபூமிப்பிராட்டியாரும் தேவிமாராக இருக்கிறார்கள்; நாபிக்கமலத்திலே பிறந்த நான்முகம் புத்திரனாக அமைந்திருக்கிறான்; ஸாம்பமூர்த்தியாய் ஸ்ரூஷபத்வஜனான ருத்திரன் பௌத்திரனாக அமைந்திருக்கிறான் – இது நான் சொல்லும் வார்த்தையல்ல; வேதங்களில் முறையிடப்படும் பொருள் இதுவேயாம். இது யதார்த்தமேயன்றி ப்ரசம்ஸாவாக்யமல்ல. ச்ரிய: பதி என்னுமிடமும் பிரமனுக்குப்பிதா என்னுமிடமும் சிவனுக்குப் பிதாமஹன் என்னுமிடமும் எம்பெருமானுடைய பரத்துவத்தை ஸ்தாபித்துக்கொடுத்து சிவாதிகளுடைய அவரத்வத்தையும் நிலைநாட்டித்தருமென்க.

English Translation

The lotus-lady on his chest and Earthy lady at his feet, are spouses for the lotus-Lord whose navel bears the Maker-Lord. The Lord with lady-half-his-self, — rider of the bull, — Siva is son of Brahma, Vedas quoth, now all the rest is falsity.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top