(821)

(821)

குந்தமோடு சூலம்வேல்கள் தோமரங்கள் தண்டுவாள்

பந்தமான தேவர்கள்ப ரந்துவான கம்முற

வந்தவாண னீரைஞ்ஞூறு தோள்களைத்து ணித்தநாள்

அந்தவந்த வாகுலம மரரேயறிவரே

பதவுரை

குந்தமோடு குலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்

ஈட்டிகளென்ன சூலங்களென்ன வேலாயுதங்களென்ன இருப்புலக்கைகளென்ன கதைகளென்ன வாள்களென்ன (இவற்றோடு கூட)
பந்தம் ஆன தேவர்கள்

கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள்
பரந்து

(பல திக்குகளிலும்) சிதறிப் போய்
வானகம் உற

தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர
வந்த வாணன்

(பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய
ஈர் ஐநூறு தோள்களை

ஆயிரந்தோள்களை
துணிந்த நாள்

அறுத்துத் தள்ளினபோது (அத்தெய்வங்ள்)
அந்த அந்த அகுலம்

வாயாற்சொல்ல முடியாதபடி வியாகுலப்பட்டமையை
அமரரே அறிவர்

(நாம் அறியோம்;) அத் தெய்வங்கள் தாமே அறிவர். (அவர்களையே கேட்டுக் கொள்வது.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “வரந்தரமிடுக்கிலாததேவர்” என்று கீழ்ப்பாட்டிற் கூறியதைக்கேட்ட சிலர், ‘இப்படிச் சொல்லலாமோ? அவர்களுக்கு சக்தி இல்லையோ? அவர்களை ஆச்ரயித்து இஷ்ட ஸிக்தி பெற்றவர்கள் பலபேர்களில்லையோ?” என்ன; ருத்ரனை யாச்ரயித்து அவனுக்கு தந்தரங்கனாயிருந்த பாணாஸுரன் பட்டபாடும், அந்த ருத்ரன் தானும் கண்கலங்கினபடியும் அப்போது உடன்பட்ட தேவர்கட்கே தெரியுமத்தனையென்கிறார்.

பந்தமான தேவர்கள் = பந்தமாவது ஸம்பந்தம்; ருத்ரனோடு ஸம்பந்தமுடையவர்களான ஷûப்ரஹ்மண்யன் முதலான தேவதைகள் என்றபடி வாணனுக்கு உறவான ருத்ராதிகள் என்றுமாம். இங்ஙனன்றிக்கே, “குந்தமோடு சூலம் வேற்கள் தோடரங்கள் தண்டுவாள் பந்தமான” என்று சேர்த்து அந்வயிக்கவுமாம்; குந்தம் முதலான ஆயுதங்கள் காற்கட்டாகப் பெற்ற தேவர்கள் என்றதாகிறது. ரக்ஷகமாக வேண்டிய ஆயுதங்கள் காற்கட்டானபடி; இராவணனுக்குப்போல.

English Translation

The godlings wielding lancet, axe, trident, spear and dagger, club, ran away from battle scene and sought refuge in sky above. The thousand-handed Bana had to lose his arms and shoulders then. The havoc that the discus played, — the gods above were witness to!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top