(804)

(804)

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்

கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்

தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்

பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.

பதவுரை

மோடியோடு

காளியும்
இலச்சை ஆய சாபம் எய்தி முக்கணான்

வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும்
மக்களோடு

ஸ்வஜனங்களோடு
கூடு

திரண்ட
சேனை

ஸேனையை
கொண்டு

அழைத்துக்கொண்டு
வெம் சமத்து

பயங்கரமான போர்க்களத்திலிருந்து
மண்டி ஓட

வேகமாக ஓடிப்போன வளவிலே
வாணன்

பாணாஸுரனது
ஆயிரம் கரம்

ஆயிரம் கைகளை
கழித்த

அறித்தொழித்த
ஆதி மால்

பரமபுருஷனுடைய
பீடுகோயில்

பெருமைதங்கிய கோயில்
நீர் கூடு

காவேரியோடு கூடின
அரங்கம் என்றபோது

திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இலச்சை- ‘லஜ்ஜா’ என்ற வடசொல் திரிபு; வெட்கமென்று பொருள். லஜ்ஜாவஹமான சாபத்தை யடைந்த முக்கண்ணன் என்றவாறு. சாபமெய்தி = வினையெச்சமல்ல; பெயர்.

English Translation

The curse of shame, the three-eyed Lord had given to goddess Parvati, –She took her sons and host-of-gods and ran against calamity!, –they ran while all the thousand arms of Bana fell on all the sides. The Lord who wields a discus lives in cool Arangam-oor today.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top