(726)
மலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே
அலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே
கலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே
சிலைவலவா சேவகனே சீராம தாலேலோ
பதவுரை
| மலை அதனால் அணைகட்டி |
– |
மலைகளைக் கொண்டு ஸேதுபந்தனம் பண்ணி |
| மதிள் இலங்கை அழித்தவனே |
– |
அரணையுடைத்தான லங்காபுரியைப் பாழ்படுத்தினவனே |
| அலை கடலை கடைந்து |
– |
அலையெறிகின்ற திருப்பாற்கடலைக் கடைந்து |
| அமரர்க்கு |
– |
தேவர்களுக்கு |
| அமுது |
– |
அம்ருதத்தை |
| அருளிச்செய்தவனே |
– |
கொடுத்தருளினவனே! |
| கலை வலவர் தாம்வாழும் கணபுரத்து |
– |
ஸகல சாஸ்த்ரங்களையும் அறிந்தவர்கள் வாழ்கிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற |
|
என் கருமணியே |
||
| சிலைவலவா |
– |
(ஸ்ரீ சார்ங்கமென்னும்) வில்லைச் செலுத்த வல்லவனே! |
| சேவகனே |
– |
வீரனே! |
|
சீராமா! தாலேலோ |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சேவகனே = சேவகம் என்று பராக்கிரமத்துக்குப் பெயராதலால், மஹாவீரனே என்றபடி சிலைவலவா! சேவகனே! என்ற சேர்த்தியால், சார்ங்கமும் மிகை என்னும் படியான வீரப்பாடுடையவன் என்பது போதரும்
English Translation
Sleep, my brave bow-wielding Srirama, Talelo! O Dark-gem-Lord of Kannapuram, where master craftsmen reside! You made a bridge of rocks across the ocean and destroyed the fortified Lanka. You churned the Milk Ocean and gave ambrosia to the gods!
