(702)

(702)

மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு வீங்கிருள் வாயென்றன் வீதியூடே

பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப் போகின்ற போதுநான் கண்டுநின்றேன்

கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக் கைவிளிக் கின்றதும் கண்டேநின்றேன்

என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய் இன்னமங் கேநட நம்பிநீயே

பதவுரை

மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு

மின்னல் போன்று ஸூக்ஷ்மமான இடையையுடைய ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டு
வீங்கு இருள்வாய்

நிபிடமான (மிக்க) இருள் வேளையிலே
பொன் ஒத்த ஆடை

பீதாம்பரத்தாலே
குக்கூடல் இட்டு

முட்டாக்கிட்டுக் கொண்டு
என்தன் வீதி ஊடே

என் வீதி வழியே
போகின்ற போது

(அவளும் நீயுமாகப்) போகும் போது
நான் கண்டு நின்றேன்

நான் பார்த்துக் கொண்டிருந்தேன்:

(அன்றியும்:) நீ

கண்ணுற்றவளை

கண்ணில் தென்பட்ட (வேறொருத்தியை)
கண்ணால் இட்டு

(உனக்கே அற்றுத் தீரும்படி ) கடாக்ஷித்து
கை விளிக்கின்றதும்

(இன்னவிடத்தே வாவென்று) கையாலே அழைத்து ஸம்ஜ்ஞை பண்ணினதையும்
கண்டே நின்றேன்

பார்த்துக் கொண்டுதானிருந்தேன்;
அவளை விட்டு

அந்தப் பெண்மணியை விட்டு
இங்கு

என்னிடத்திற்கு
என்னுக்கு வந்தாய்

ஏதுக்காக வந்தாய்!
நம்பி

ஸ்வாமிந்!
இன்னம் அங்கே நட

இனிமேலும் நீ அவர்களிடத்திற்கே நடப்பாயாக.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வேறொருத்தியின் பாசுரம் இது.  நள்ளிருளில் ஒருவர்க்குந் தெரியாமல் போக வேணுமென்று போகிறவன் இருளன்னமாமேனியைத் திறந்து கொண்டே போகலாம்;  அல்லது கறுத்ததோர் ஆடையைப் போர்த்துக் கொண்டு போகலாம்.  நீயோ இருளை அகற்றிப் பளபளவென்று ப்ராகாசிக்கும் படியான பீதாம்பரத்தை முட்டாக்கிட்டுக் கொண்டு போனாய்;  போவதுதானும் வேறு வழியாயோ! நான் கண்டு  வயிறெரிய வேணுமென்றே என் தெருவழியே போனாய், என்ற கருத்துக்களை விரித்துக் கொள்க ( குக்கூடல் –  முட்டாக்கு )

English Translation

I saw you go as you made through the street in the cover of darkness with your arm over the shoulders of a thin-waisted dame, both covered over head with your yellow upper-cloth. Seeing another dame, you spoke to her with your eyes and made signs with your hand. I saw that also. Now, you leave her too and come here. What for? Continue going that way, O Complete Lord!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top