(702)
மின்னொத்த நுண்ணிடை யாளைக்கொண்டு வீங்கிருள் வாயென்றன் வீதியூடே
பொன்னொத்த வாடைகுக் கூடலிட்டுப் போகின்ற போதுநான் கண்டுநின்றேன்
கண்ணுற் றவளைநீ கண்ணாலிட்டுக் கைவிளிக் கின்றதும் கண்டேநின்றேன்
என்னுக் கவளைவிட் டிங்குவந்தாய் இன்னமங் கேநட நம்பிநீயே
பதவுரை
| மின் ஒத்த நுண் இடையாளை கொண்டு |
– |
மின்னல் போன்று ஸூக்ஷ்மமான இடையையுடைய ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டு |
| வீங்கு இருள்வாய் |
– |
நிபிடமான (மிக்க) இருள் வேளையிலே |
| பொன் ஒத்த ஆடை |
– |
பீதாம்பரத்தாலே |
| குக்கூடல் இட்டு |
– |
முட்டாக்கிட்டுக் கொண்டு |
| என்தன் வீதி ஊடே |
– |
என் வீதி வழியே |
| போகின்ற போது |
– |
(அவளும் நீயுமாகப்) போகும் போது |
| நான் கண்டு நின்றேன் |
– |
நான் பார்த்துக் கொண்டிருந்தேன்: |
|
(அன்றியும்:) நீ |
||
| கண்ணுற்றவளை |
– |
கண்ணில் தென்பட்ட (வேறொருத்தியை) |
| கண்ணால் இட்டு |
– |
(உனக்கே அற்றுத் தீரும்படி ) கடாக்ஷித்து |
| கை விளிக்கின்றதும் |
– |
(இன்னவிடத்தே வாவென்று) கையாலே அழைத்து ஸம்ஜ்ஞை பண்ணினதையும் |
| கண்டே நின்றேன் |
– |
பார்த்துக் கொண்டுதானிருந்தேன்; |
| அவளை விட்டு |
– |
அந்தப் பெண்மணியை விட்டு |
| இங்கு |
– |
என்னிடத்திற்கு |
| என்னுக்கு வந்தாய் |
– |
ஏதுக்காக வந்தாய்! |
| நம்பி |
– |
ஸ்வாமிந்! |
| இன்னம் அங்கே நட |
– |
இனிமேலும் நீ அவர்களிடத்திற்கே நடப்பாயாக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வேறொருத்தியின் பாசுரம் இது. நள்ளிருளில் ஒருவர்க்குந் தெரியாமல் போக வேணுமென்று போகிறவன் இருளன்னமாமேனியைத் திறந்து கொண்டே போகலாம்; அல்லது கறுத்ததோர் ஆடையைப் போர்த்துக் கொண்டு போகலாம். நீயோ இருளை அகற்றிப் பளபளவென்று ப்ராகாசிக்கும் படியான பீதாம்பரத்தை முட்டாக்கிட்டுக் கொண்டு போனாய்; போவதுதானும் வேறு வழியாயோ! நான் கண்டு வயிறெரிய வேணுமென்றே என் தெருவழியே போனாய், என்ற கருத்துக்களை விரித்துக் கொள்க ( குக்கூடல் – முட்டாக்கு )
English Translation
I saw you go as you made through the street in the cover of darkness with your arm over the shoulders of a thin-waisted dame, both covered over head with your yellow upper-cloth. Seeing another dame, you spoke to her with your eyes and made signs with your hand. I saw that also. Now, you leave her too and come here. What for? Continue going that way, O Complete Lord!
