(676)

(676)

அங்கை யாழி யரங்க னடியிணை தங்கு

சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்

கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்

இங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே

பதவுரை

அம் கை ஆழி

அழகிய திருக்கையிலே திருவாழியாழ்வானை ஏந்தியுள்ள
அரங்கன்

ஸ்ரீரங்கநாதனுடைய
அடி இணை

திருவடிகளில்
தங்கு சிந்தை

பொருந்திய மனமுடையவராய்
தனி பெரு பித்தன் ஆம்

லோக விலக்ஷணரான பெரியபித்தராய்
கொங்கர் கோன்

சேரதேசத்தவர்களுக்குத் தலைவரான
குலசேகரன்

குலசேகராழ்வார்
சொன்ன

அருளிச்செய்த
சொல்

இப்பாசுரங்களை
இங்கு

இவ்விபூதியிலே
வல்லவர்க்கு

ஓதவல்லவர்களுக்கு
ஏதம் ஒன்று இல்லை

(பகவதநுபவத்திற்கு) ஒருவிதமான இடையூறும் உண்டாகமாட்டாது.

English Translation

These songs by Kulasekara, King of the Western tract, sung with extreme madness for the discus-wielding-Lord Aranga are offered at his feet with devotion. Those who master it will have no affliction here or hereafter.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top