(675)

(675)

பேய ரேயெனக் கியாவரும் யானுமோர்

பேய னேயெவர்க் கும்இது பேசியென்

ஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்

பேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே

பதவுரை

யாவரும்

இவ்வுலகத்தாரடங்கலும்
எனக்கு

என் வரைக்கும்
பேயரே

பைத்தியக்காரர்கள் தான்;
யானும்

(அவர்களிற் காட்டில் விலக்ஷணனான) நானும்
எவர்க்கும்

எவர்களுக்கும்
ஓர் பேயனே

ஒரு பைத்தியக்காரன் தான்;
இது

இவ்விஷயத்தை
பேசி

(விரிவாகச்) சொல்வதனால்
என்

என்ன ப்ரயோஜநமுண்டு?
ஆயனே

‘ஸ்ரீகிருஷ்ணனே!
அரங்கா

ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன்

என்று (பகவந்நாமங்களைச் சொல்லி) கூவாநின்றேன்;

எம்பிரானுக்கே பேயனாய் ஒழிந்தேன்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ???? ???????? ?????? ????????  (கோமணம் கட்டாத ஊரில் கோமணம் கட்டுவானொருவன் பைத்தியக்காரன் போல் பரிஹஸிக்கத்தக்கவனாவன்) என்ற பழமொழியின்படி-லோகவிஜாதீயரான நீர் பைத்தியக்காரன்; என்று எல்லாராலும் இகழக் கூடியவராயிருக்கின்றீரே! என்று ஆழ்வாரை நோக்கிச் சிலர் கூற, அவர்களுக்கு விடைகூறுகின்ற பாசுரமிது.

English Translation

To the world I am mad. To me the world is mad. Alas! What use dilating on this? “O Cowherd-Lord!”, I call, mad with love for the Lord of Arangam, My master.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top