(672)
தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்
ஆதி ஆய னரங்கன்அந் தாமரைப்
பேதை மாமண வாளன்றன் பித்தனே
பதவுரை
| தீது இல் நல் நெறி நிற்க |
– |
குற்றமற்ற நல்வழி இருக்கச் செய்தே |
|
(அவ்வழியில் போகாமல்) |
||
| அல்லாது செய் நீதியாரொடும் |
– |
நல்வழிக்கு எதிர்த்தட்டானவற்றைச் செய்வதை விரதமாகக் கொண்டுள்ள பிராகிருதர்களோடு |
|
யான் கூடுவது இல்லை |
||
| ஆதி |
– |
(உலகங்கட்கு) முதல்வனாய் |
| ஆயன் |
– |
ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்து ஸர்வஸஞ்லபனாய் |
| அம் தாமரை பேதை மா மணவாளன் |
– |
அழகிய தாமரைப் பூவில் அவதரித்த |
|
பிராட்டியின் வல்லபவனான |
||
| அரங்கன் தன் |
– |
ஸ்ரீரங்கநாதன் திறத்தில் |
| பித்தன் |
– |
மோஹங் கொண்டிரா நின்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தேவதாந்தரங்களைப் பற்றுகை, தீயநெறி; எம்பெருமானை ஸ்வயம் ப்ரயோஜநமாகப் பற்றுகை; நல்ல நெறி; ஐச்வரியம் முதலிய க்ஷுத்ரபுருஷார்த்தங்களை விரும்பி அவற்றுக்காக எம்பெருமானைப் பற்றுகை, தீமையோடு கலசிய நல்ல நெறி-என்று கண்டுகொள்க. அநந்ய ப்ரயோஜநமாக எம்பெருமானைப் பற்றுகையாகிற பரமசுத்த மார்க்கத்தை விட்டிட்டு, ஸ்வரூப விருத்தமாக ஒழுகுகின்றவர்களோடு எனக்குப்பொருந்த மாட்டா தென்றாராயிற்று.
English Translation
I will not be one with those who abandon the virtuous path and do wrong things. I am mad for the first-Lord Aranga, the cowherd-Lord, the bridegroom of lotus-dame-Lakshmi.
