(672)

(672)

தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்

நீதி யாரொடும் கூடுவ தில்லையான்

ஆதி ஆய னரங்கன்அந் தாமரைப்

பேதை மாமண வாளன்றன் பித்தனே

பதவுரை

தீது இல் நல் நெறி நிற்க

குற்றமற்ற நல்வழி இருக்கச் செய்தே

(அவ்வழியில் போகாமல்)

அல்லாது செய் நீதியாரொடும்

நல்வழிக்கு எதிர்த்தட்டானவற்றைச் செய்வதை விரதமாகக் கொண்டுள்ள பிராகிருதர்களோடு

யான் கூடுவது இல்லை

ஆதி

(உலகங்கட்கு) முதல்வனாய்
ஆயன்

ஸ்ரீகிருஷ்ணனாய் அவதரித்து ஸர்வஸஞ்லபனாய்
அம் தாமரை பேதை மா மணவாளன்

அழகிய தாமரைப் பூவில் அவதரித்த

பிராட்டியின் வல்லபவனான

அரங்கன் தன்

ஸ்ரீரங்கநாதன் திறத்தில்
பித்தன்

மோஹங் கொண்டிரா நின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தேவதாந்தரங்களைப் பற்றுகை, தீயநெறி; எம்பெருமானை ஸ்வயம் ப்ரயோஜநமாகப் பற்றுகை;  நல்ல நெறி; ஐச்வரியம் முதலிய க்ஷுத்ரபுருஷார்த்தங்களை விரும்பி அவற்றுக்காக எம்பெருமானைப் பற்றுகை, தீமையோடு கலசிய நல்ல நெறி-என்று கண்டுகொள்க. அநந்ய ப்ரயோஜநமாக எம்பெருமானைப் பற்றுகையாகிற பரமசுத்த மார்க்கத்தை விட்டிட்டு, ஸ்வரூப விருத்தமாக ஒழுகுகின்றவர்களோடு எனக்குப்பொருந்த மாட்டா தென்றாராயிற்று.

English Translation

I will not be one with those who abandon the virtuous path and do wrong things. I am mad for the first-Lord Aranga, the cowherd-Lord, the bridegroom of lotus-dame-Lakshmi.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top