(673)
எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்
தம்பி ரானம ரர்க்குஅரங் கநகர்
எம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே
பதவுரை
| எம் பரத்தர் அல்லா ரொடும் |
– |
என்னைப்போலே அநந்ய ப்ரயோஜநரா யிராதவர்களோடு; |
| கூடலன் |
– |
(நான்) கூடமாட்டேன்; |
| உம்பர் வாழ்வை |
– |
தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலிய போகங்களையும் |
| ஒன்று ஆக |
– |
ஒரு புருஷார்த்தமாக |
| கருதலன் |
– |
எண்ணமாட்டேன்; |
| அமரர்க்கு |
– |
நிதயஸூரிகளுக்கு |
| தம்பிரான் |
– |
ஸ்வாமியாய் |
| அரங்கம் நகர் |
– |
கோயிலிலே எழுந்தருளியிருக்கிற |
| எம்பிரானுக்கு |
– |
பெரிய பெருமாள் விஷயத்தில் |
| ஏழுமையும் |
– |
எப்போதும் |
| பித்தன் |
– |
பித்தனாகா நின்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸம்ஸாரத்தில் வெறுப்பும் கைங்கரியத்தில் விருப்பும் இல்லையாகில் ப்ரஹ்மாதிகளின் ஸம்பத்தேயாகிலும் அதை நான் க்ருணமாகவே நினைப்பேன்; நித்யஸூரிகளெல்லாம் அநுபவிக்குமாபோலே ஸம்ஸாரிகளும் இழவாமல் அநுபவிக்கும்படி கோயிலிலே வந்து ஸூலபராகக் கண்வளர்ந்தருளுமவருடைய இந்த நீர்மையை நினைத்து ‘இது எத்திறம்!’ என்று மோஹிப்பதே எனக்குத் தொழிலாயிருக்கு மென்கிறார்.
English Translation
I neither mix with non devotees nor consider living like Lords a virtue. My Lord of Arangam, –my master for seven lives, –is the Lord of gods. I only crave for him.
