(662)
பொய்சிலைக்குர லேற்றெருத்தமி றுத்துபோரர வீர்த்தகோன்
செய்சிலைச்சுடர் சூழொளித்திண்ண மாமதிள்தென்ன ரங்கனாம்
மெய்சிலைக்கரு மேகமொன்றுதம் நெஞ்சில்நின்று திகழப்போய்
மெய்சிலிர்ப்பவர் தம்மையேநினைந் தென்மனம்மெய்சி லிர்க்குமே
பதவுரை
| பொய் |
– |
க்ருத்ரிமமாய் |
| சிலைகுரல் |
– |
கோபத்தை வெளியிடுகின்ற கோஷத்தை யுடைத்தான |
| ஏறு |
– |
(ஏழு) ரிஷபங்களின் |
| எருத்தம் இறுத்து |
– |
முசுப்புகளை முறித்தவனாய் |
| போர் அரவு ஈர்த்த கோன் |
– |
போர் செய்யவந்த காளிய நாகத்தை நிரஸித்தஸ்வாமியாய், |
| சிலை செய் |
– |
கல்லினால் செய்யப்பட்டு |
| சுடர்ஒளி |
– |
மிக்க தேஜஸ்ஸையுடைத்தாய் |
| திண்ணம் |
– |
த்ருடமாயிருக்குந்தன்மையையும் உடைத்தாய் |
| மா |
– |
பெரிதான |
| மதிள் சூழ் |
– |
மதிகளாலே சூழப்பட்ட |
| தென் அரங்கன் ஆம் |
– |
தென்னரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான ரங்கநாதனாகிய |
| மெய் சிலை கரு மேகம் ஒன்று |
– |
சரீரத்தில் வில்லோடு கூடிய ஒரு காளமேகமானது |
| தன் நெஞ்சுள் நின்று திகழப்போய் |
– |
தங்கள் மனதில் நிலைத்து விளங்கப் பெற்ற |
| மெய் சிலிர்ப்பவர் தம்மையே |
– |
மயிர்க்கூச் செறியும் சரீரமுடைய ஸ்ரீவைஷ்ணவர்களையே |
| என் மனம் நினைந்து |
– |
என் நெஞ்சானது அநுஸந்தித்து |
| மெய் சிலிர்க்கும் |
– |
மயிர்க்கூச்செறியப் பெற்றது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடியார்களை ஆட்கொள்வதற்காக அருமையான செயல்களைச் செய்தருளின எம் பெருமானாகிற காளமேகத்தை ஹ்ருதயத்திலே வஹிக்கப்பெற்று எப்போதும் மயிர்க்கூச்செறியும் திருமேனியையுடயரா யிருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்களை அநுஸந்தித்து, அவர்கள் பாடும் பாட்டை என்னெஞ்சு படாநின்ற தென்கிறார்.
“திகழப்போய்” என்ற விடத்து, போய்-வார்த்தைப்பாடு.
“மனம் மெய்சிலிர்க்கும்” என்றது-மனம் விகாரப்படாநின்ற தென்றபடி.
English Translation
The Lord of Arangam is surrounded by high masonry walls that radiate his aura. He killed seven charging bulls and battled with a terrible serpent. He is like a rainbow – adorned dark cloud. Those who contemplate him in their hearts, experience horripilation. When my heart goes out to these devotees, I too experience horripilation.
