(638)
அனுங்க வென்னைப் பிரிவுசெய் தாயர் பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த் தனனைக் கண்டீரே
கணங்க ளோடு மின்மேகம் கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட விருந்தா வனத்தே கண்டோமே
பதவுரை
| அனுங்க |
– |
நான் வருந்தும்படியாக |
| என்னை பிரிவு செய்து |
– |
என்னைப் பிரியவிட்டுப்போய் |
| ஆயர்பாடி |
– |
திருவாய்ப்பாடியை |
| கவர்ந்து |
– |
ஆக்ரமித்து |
| உண்ணும் |
– |
அநுபவிக்கின்றவனாய் |
| மின் மேகம் |
– |
மின்னலும் மேகமும் |
| கலந்தால்போல் |
– |
ஒன்றோடொன்று சேர்ந்தாற்போலே |
| வனமாலை மினுங்க நின்று |
– |
(கறுத்த திருமேனியிலே மின்னல் போன்ற) வனமாலை திகழப்பெற்று |
| குணுங்கு நாளி |
– |
வெண்ணெய் மொச்ச நாள்ளம் நாறுமவனாய் |
| குட்டேற்றை |
– |
இளைய ரிஷபம்போன்றவனான |
| கோவர்த்தனனை |
– |
கண்ணபிரானை கண்டீரே? |
| கணங்களோடு |
– |
(தோழன்மாருடைய) கூட்டங்களோடு கூட |
| விளையாட |
– |
விளையாடாநிற்க (விருந்தாவனத்தே கண்டோம்) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நான் மிகவும் தளர்ச்சியடையும்படி என்னைப் பிரிந்துபோய்த் திருவாய்ப்பாடி முழுதையுங் கொள்ளை கொண்டு திரியுமவனாய், * வெண்ணெயளைந்த குணுங்கு நாற்றம் கமழுமவனான கோபாலகிருஷ்ணனைக் கண்டதுண்டோ? என்று கேட்பார் பாசுரம் -முன்னடிகள். மின்னலும் மேகமும் சேர்ந்தாற்போலே, ஸ்யாம்மான திருமேனிக்குப் பரபாகமாய் உஜ்ஜவலமான வனமாலை அசையை அசையத் * தன்னோராயிரம் பிள்ளைகளோடு விளையாட நிற்க விருந்தாவனத்தே கண்டோமென்று விடையளிப்பார் பாசுரம் பின்னடிகள்.
ஆயர்பாடி கவர்ந்துண்ணும் – ஆயர்பாடி யென்றது இடவாகு பெயராய், திருவாய்ப்பாடியிலுள்ள பெண்களையும் தயிர் நெய்பால் முதலிய போக்யபதார்த்தங்களையும் குறிக்கும் குணுங்கு நாற்றமாவது – மொச்ச நாள்ளம். இடைச்சாதியர்க்கு இளயல்வான நாற்றம். குட்டேறு – இளையவ்ருஷபம் கோவர்த்தனன் – பசுக்களை ஒன்று நூறாக வளர்க்குமவன்.
கண்களோடு – (***) என்னும் வடசொல் – கூட்டமென்று பொருள்படும். இங்கே, தோழன்மார் கூட்டமெனக் கொள்க. * தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவானிறே கண்ணபிரான். மின் மேகம் – உம்மைத்தொகை மின்னலும் மேகமும் என்றவாறு.
English Translation
“Leaving me forlorn, a youthful butter-stench bull went raiding into Ayppadi. Did you see this Govardhana lad?” “With his Vanamala shining on his dark frame like a lightning over clouds, we saw him playing with his gang in Brindavana”.
