(532)

(532)

கஞ்சன் வலைவைத்த வன்று காரிரு ளெல்லில் பிழைத்து

நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய் நின்றஇக் கன்னிய ரோமை

அஞ்ச உரப்பாள் அசோதை  ஆணாட விட்டிட் டிருக்கும்

வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட மசுமையி லீகூறை தாராய்

பதவுரை

கஞ்சன்

கம்ஸனானவன்
வலை வைத்த அன்று

உன்னை அழிப்பதாக நினைத்தகாலத்தில்
கார் இருள்

மிக்க இருளையுடையத்தான
எல்லில்

இரவில்
பிழைத்து

பிழைத்து,
நின்ற

(அம்மணமாக) நிற்கின்ற
இக்கன்னிய ரோமை

இளம் பெண்களான எங்களுக்கு
நெஞ்சு துக்கம் செய்ய

மனத்துன்பத்தை உண்டாக்குவதற்காக
போந்தாய்

வந்து பிறந்தாய்’
அசோதை

யசோதைப் பிராட்டி யோவென்றால்
அஞ்ச

நீ பயப்படும்படி
உரப்பாள்

உன்னை அதட்டமாட்டாள்’
ஆணாட விட்டிட்டிருக்கும்

தீம்பிலே கைவளரும் படி உன்னை விட்டிரா நின்றாள்’
வஞ்சகம்

வஞ்சனையுடைய
பேய்ச்சி

பூதனையினுடைய
பால்

முலைப்பாலை
உண்ட

(அவளுயிரோடே கூட) உறிஞ்சியுண்ட
மசுமை இலீ

லஜ்ஜையில்லாதவனே!
கூறை தாராய்

சேலைகளைத் தந்தருள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வஸுதேவதேவியான தேவகியின் எட்டாவது கருவில் திருமால் கண்ணனாய் அவதரிக்க, அப்போதே வஸுதேவ தேவகிகளின் கால் விலங்கு இற்று முறிந்துவிழ, அக்குழந்தையைக் கம்ஸன் கொல்லக் கூடுமென்ற அச்சத்தினால், தாய் தந்தையர் அத்தெய்வக் குழவியின் அநுமதிபெற்று அந்தச் சிசுவை அது பிறந்த நடுராத்திரியிலேயே திருவாய்ப்பாடியிலுள்ள இடையர்க்கெல்லாம் தலைவரான நந்தகோபரது திருமாளிகையிலே ரஹஸ்யமாகக் கொண்டு சேர்த்து விட்டு’ அங்கு அப்பொழுது அவர் மனைவியான யசோதைக்கு மாயையின் அம்சமாகப் பிறந்திருந்ததொரு பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து விட, அது முதற் கம்ஸனைக் கொல்லுகிறவரையிற் கண்ணபிரான் அக் கோகுலத்திலேயே நந்தகோப குமாரனாய் யசோதை வளர்க்க வளர்ந்தருளின் னென்ற வரலாறு அறிக.

பிரானே! நீ கஞ்சனுக்குத் தப்பிப்பிழைத்து எங்களை யெல்லாம் வாழ்விப்பதற்காக வென்று நினைத்திருந்தோம்’ இன்று நீ செய்யும் படிகளைப் பார்த்தால் எங்களைத் துக்கப்படுத்துவதற்காகவே நீ தப்பிப் பிழைத்தாய் என்று நினைக்கலாய்த் தென்கிறார்கள்.

(அஞ்ச உரைப்பாள் இத்யாதி.) கண்ணன் செய்யுந் தீம்புகளை யசோதை யிடஞ் சென்று யாரேனும் முறையிட்டால், அவள் பாரிவின் மிகுதியாலே அவனை அதட்டமாட்டாமல் “இடைப்பெண்கள் திறத்தில் நீ இப்படி தானா தீம்பு செய்கிறது” என்றாற்போலச் சில வார்த்தைகள் சொல்லி மேன்மேலு மவனைத் தீம்பிலே கைவளரவிடுவள் என்க.

“ஆணாட இட்டிட்டிருக்கும்” என்றும் பிரிக்கலாம்’ இட்டிடுகை-உபேக்ஷித்திருக்கை. “(இருக்கும்.) தான் கண்டபடி இவனைத் தீம்பு செய்ய விட்டு ‘நம் மகன் இப்படி பருவம் நிரம்பித் தீமை செய்யப் பெற்றோம்’ என்னுமத்தாலே ‘தொல்லையின் பத்திறுதிகண்டாள்’ என்கிறபடியே ஆநந்த நிர்ப்பரையாய் கருதக்ருத்யை யாயிருக்கம்” என்ற வியாக்கியாநஸூக்தி அறிக.

(மசுமையிலி!) பிறர்நோவு படுவதைக் கண்டால் “ஹ்ரிரேஷஹிம்மாதுலா” உன்று லஜ்ஜைப்படும் சக்ரவர்த்தித் திருமகனைப் போலன்றியே வெட்கங்கெட்டுப்பிழைக்கிற பிழைப்பிறே உன்னது என்கை. (கூ)

English Translation

O Sire come to hurt the feelings of us stranded maidens!   In the dead of the night you could escape from Kamsa’s trap. Yasoda does not scold; she lets you go as you wish. O Shameless one who sucked the ogress’s breasts, hand us our clothes.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top