(467)
பொன்னைக்கொண்டு உரைகல்மீதே நிறமெழ வுரைத்தாற்போல்
உன்னைக்கொண்டுஎன் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்
உன்னைக்கொண்டு என்னுள்வைத்தேன் என்னையும் உன்னிலிட்டேன்
என்னப்பாஎன் னிருடீகேசா என்னுயிர்க் காவலனே.
பதவுரை
| என் அப்பா |
– |
எனக்குத் தந்தையானவனே! |
| என் இருடீகேசா |
– |
எனது இந்திரியங்களை (உன் வசப்பட்டொழுகும்படி) நியமிக்க வல்லவனே! |
| என் உயிர் |
– |
என் ஆத்மாவை |
| காவலனே |
– |
(அந்யசேஷமாகாதபடி) காக்கவல்லவனே! |
| பொன்னை |
– |
ஸுவர்ணத்தை |
| நிறம் ஏழ |
– |
நிறமறிய (நிறத்தைப் பரீஷிப்பதற்காக) |
| உரைகல் மீது கொண்டு |
– |
உரைக்கல்லில் இட்டு |
| உரைத்தால் போல் |
– |
உரைப்பதுபோல |
| உன்னை |
– |
(பரமபோக்யனான) உன்னை |
| என் நா அகம் பால் கொண்டு |
– |
என் நாவினுட்கொண்டு |
| மாற்று இன்றி |
– |
மாற்று அழியும்படி |
| உரைத்துக்கொண்டேன் |
– |
உரைத்துக்கொண்டேன். |
| உன்னை |
– |
(யோகிகட்கம் அரியனான) உன்னை |
| என்னுள் |
– |
என் நெஞ்சினுள் |
| கொண்டு வைத்தேன் |
– |
அமைத்தேன்; |
| என்னையும் |
– |
(நீசனான) அடியேனையும் |
| உன்னில் இட்டேன் |
– |
உனக்குச் சேஷப்படுத்தினேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில், எம்பெருமானுக்கு அம்ருதத்ருஷ்டாந்தங் கூறினர்; இப்பாட்டில் ஸ்வர்ணத்ருஷ்டாந்தங் கூறுகின்றனர். உலகத்தில் பொன்னைப் பரீக்ஷிக்க விரும்புமவர்கள், அதனை உரைகல்லில் இட்டு உரைத்துப் பார்ப்பர்கள்; அதுபோல், பொன்போன்ற உன்னை, அற்பசாரங்களில் மண்டின என் நாக்காகிற உரைகல்லில் இட்டு உரைத்தேன்; நல்ல பொன்னைக் கெட்ட கல்லிலிட்டுரைத்தால் அப்பொன்னினுடைய மாற்றுக் குறைவதுபோல், நீ என்றன் சழக்கு நாக்கிலிட்டு ரைக்கப்பட்டமையால் மாற்று, அழியப்பெற்றாய் என்பது, முன்னடிகளின் கருத்து. உரைகல்-உரைத்துப் பார்ப்பதற்கு உரிய இடமாகிய கல்; ***-***- மென்பர். நிறமேழ – நிறமறிவதற்காக என்றே பொருளாகும்; ‘நிறமுண்டாம்படி’ என்பது பொருளன்று; பொல்லாப்பொன்னை உரை கல்லிலே உரைத்த மாத்திரத்தினால் அதற்கு நல்ல நிறமுண்டாகமாட்டாதே; உள்ளமாற்றேயன்றோ காணப்படுவது. நல்ல பொன்னையும் பொல்லாப் பொன்னையும் உரைகல்லில் நிறம்பார்க்கவிறே உரைப்பது. ஆதலால், நிறமெழ என்பதற்கு, ‘நிறமறியும்படி’ என்றே பொருள்கொள்க. ‘உன்னைக்கொண்டு’ இத்தியாதி இரண்டாமடி நைச்சியநுஸந்தாநம். ஒருவராலும் துதிக்கவொண்ணாத விஷயத்தை ஒருவன் துதிக்கத் தொடங்குவது – அவ்விஷயத்தைத் தூஷிப்பதுபோலாகுமேயன்றி, பூஷிப்பதாக மாட்டாதானமைபற்றி, மாற்றின்றி என்கிறார். இங்கு, இன்றி என்பதற்கு – ‘இல்லாமற்போம்படி’ எனப் பொருள் கொள்ளவேணும். “மாற்றின்றி உரைத்துக்கொண்டேன்- மாற்றழியும்படி’ பேசிக்கொண்டு நின்றேன். நல்லபொன்னை நல்லகல்லிலே உரைத்தாலிறே மாற்று அறியலாவது; தரமல்லாத கல்லிலே உரைப்பாரைப்போலே, உன்னை என் நாக்காலே தூக்ஷித்தேன்; பொன் என்கிறது -ஈச்வரனை; கல் என்கிறது – நாக்கை” என்ற வியாக்கியான வாக்கியங் காணத்தக்கது.
இப்படி அருளிச்செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! இன்றளவும் நான் உமக்குச் செய்துவந்த நன்றிகளுக்கு ஓரளவில்லை; ‘நெய்க்குடத்தைப்பற்றி’ என்ற திருமொழியில் அந்நன்றிகளை நீர்தாமே பரக்கப் பேசியிருக்கிறீர்; இப்படி நான் உம்மைப் பரமபரவநராக்கி யிருக்கச்செய்தேயும், உம்மை நீர் மிகவும் அசத்தராகப் பாவித்து, என்னை நாவிற்கொண்டு தூக்ஷித்து விட்டதாகப் பேசுகிறீரே, இஃது என்ன கொடுமை! உமக்கு மேற்பட்ட நன்றி கெட்டார் இவ்வுலகில் இல்லைகாணும்” என்ன; அது கேட்ட ஆழ்வார் மிகவும் அஞ்சி அவ்வெம்பெருமான் திருவடிகளில் ஆத்மஸமர்ப்பணம் பண்ணுகிறார், பின்னடிகளால்; “நன்றாக, நானுன்னை யன்றியிலேன் கண்டாய் நாரணமே! நீயென்னை யன்றியிலை” என்றாற்போல நாராயண சப்தார்த்தம் பின்னடிகளில் விவரிக்கப் பட்டதாகும்.
English Translation
Like rubbing nugget on a touchstone to check its purity, I have rubbed your name on my tongue. Forever, I have placed you in myself and myself in you. My lord Hrishikesa my Father, my Guardian-spirit!
