(448)

(448)

உற்ற வுறுபிணி நோய்காள் உமக்குஒன்று சொல்லுகேன் கேண்மின்

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்

அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினை காள்உமக்கு இங்குஓர்

பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.

பதவுரை

உற்ற

நெடுநாளாக இருக்கிற
உறுபிணி

மிக்க வருத்தத்தைச்செய்கிற
நோகாள்

நோய்களே!
உமக்கு

உங்களுக்கு
ஒன்று

ஒருவார்த்தை
சொல்லுகேன்

சொல்லுகிறேன்:
கேண்மின்

கேளுங்கள்;

(நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது)

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்

பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளியிருக்கைக்கு இடமான
திருக்கோயில்

திருக்கோயிலாயிற்று;
கண்டீர்

முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் ) பாருங்கள்;
ஆழ்

(ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின
வினை கான்

ஓ கொடுமைகளே!
இன்னம்

மறுபடியும்
அற்றம் உரைக்கின்றேன்

அறுதியாகச் சொல்லுகிறேன்;
உமக்கு

உங்களுக்கு
இங்கு

இவ்விடத்தில்
ஓர் பற்று இல்லை

ஒருவகை அவலம்பமும் கிடையாது;
நடமின்

(இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள்.

பண்டு அன்று பட்டினம் காப்ப

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-யசோதைப்பிராட்டிக்கு அடங்கி நடந்த ஸ்ரீகிருஷ்ணன் எனக்கு எளியனாய்நின்று தானுகந்தருளின நிலங்களிலுள்ள அன்புகொண்டு என் தேஹத்தில் எழுந்தருளியிருக்கிறான்; இதை ப்ரத்யக்ஷமாகக் காணுங்கோளென்று நோய்களுக்குக் கூறி, பிறகு அந்நோய்களுக்குங் காரணமான பாபங்களை நோக்கி மீண்டும் ‘உங்களுக்காகத் தீர்ந்த ஒரு விஷயங்சொல்லுகின்றேன்: அதாவது- என்னுடைய தேஹம் முன்போலன்றி ஸ்ரீகிருஷ்ணன் குடிபுகுந்ததனால் காவல்பெற்றிருக்கின்றது; ஆகையால் இந்த தேஹத்தில் நீங்கள் நிராசையாய்ப் போய்விடுங்கள்’ என்றருளிச் செய்கிறார்… … (சு)

English Translation

O Ye great miserable sicknesses! Listen, Let me tell you something. Know that this, my body, is a temple where the cowherd-Lord resides. O Deep-rooted miseries, let me repeat; you have not place here, know it. So more on. No more like old, the fortress is on guard!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top