(448)
உற்ற வுறுபிணி நோய்காள் உமக்குஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர்
அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினை காள்உமக்கு இங்குஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.
பதவுரை
| உற்ற |
– |
நெடுநாளாக இருக்கிற |
| உறுபிணி |
– |
மிக்க வருத்தத்தைச்செய்கிற |
| நோகாள் |
– |
நோய்களே! |
| உமக்கு |
– |
உங்களுக்கு |
| ஒன்று |
– |
ஒருவார்த்தை |
| சொல்லுகேன் |
– |
சொல்லுகிறேன்: |
| கேண்மின் |
– |
கேளுங்கள்; |
|
(நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது) |
||
| பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் |
– |
பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளியிருக்கைக்கு இடமான |
| திருக்கோயில் |
– |
திருக்கோயிலாயிற்று; |
| கண்டீர் |
– |
முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் ) பாருங்கள்; |
| ஆழ் |
– |
(ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின |
| வினை கான் |
– |
ஓ கொடுமைகளே! |
| இன்னம் |
– |
மறுபடியும் |
| அற்றம் உரைக்கின்றேன் |
– |
அறுதியாகச் சொல்லுகிறேன்; |
| உமக்கு |
– |
உங்களுக்கு |
| இங்கு |
– |
இவ்விடத்தில் |
| ஓர் பற்று இல்லை |
– |
ஒருவகை அவலம்பமும் கிடையாது; |
| நடமின் |
– |
(இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள். |
|
பண்டு அன்று பட்டினம் காப்ப |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-யசோதைப்பிராட்டிக்கு அடங்கி நடந்த ஸ்ரீகிருஷ்ணன் எனக்கு எளியனாய்நின்று தானுகந்தருளின நிலங்களிலுள்ள அன்புகொண்டு என் தேஹத்தில் எழுந்தருளியிருக்கிறான்; இதை ப்ரத்யக்ஷமாகக் காணுங்கோளென்று நோய்களுக்குக் கூறி, பிறகு அந்நோய்களுக்குங் காரணமான பாபங்களை நோக்கி மீண்டும் ‘உங்களுக்காகத் தீர்ந்த ஒரு விஷயங்சொல்லுகின்றேன்: அதாவது- என்னுடைய தேஹம் முன்போலன்றி ஸ்ரீகிருஷ்ணன் குடிபுகுந்ததனால் காவல்பெற்றிருக்கின்றது; ஆகையால் இந்த தேஹத்தில் நீங்கள் நிராசையாய்ப் போய்விடுங்கள்’ என்றருளிச் செய்கிறார்… … (சு)
English Translation
O Ye great miserable sicknesses! Listen, Let me tell you something. Know that this, my body, is a temple where the cowherd-Lord resides. O Deep-rooted miseries, let me repeat; you have not place here, know it. So more on. No more like old, the fortress is on guard!
