(444)
சித்திர குத்த னெழுத்தால் தென்புலக் கோன்பொறி யொற்றி
வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார்
முத்துத் திரைக்கடற் சேர்ப்பன் மூதறி வாளர் முதல்வன்
பத்தர்க் கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே.
பதவுரை
| சித்திர குத்தன் |
– |
சித்ரகுப்தனென்கிற (யமலோகத்துக்) கணக்குப்பிள்ளையானவன் |
| தென் புலம் கோன் |
– |
தெற்குத்திசைக்குத் தலைவனான யமனுடைய |
| பொறி ஒற்றி |
– |
மேலெழுத்தை இடுவித்து |
| எழுத்தாய் வைத்த |
– |
(தான்) எழுதிவைத்த |
| இலச்சினை |
– |
குறிப்புச்சீட்டை |
| தூதுவர் |
– |
யமகிங்கரர்கள் |
| மாற்றி |
– |
கிழித்துப்போட்டுவிட்டு |
| ஓடி ஒளிந்தார் |
– |
கண்ணுக்குத் தெரியாத இடந்தேடி) ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்; |
| முத்த |
– |
முத்துக்களை (க்கொண்டு வீசுகிற) |
| திரை |
– |
அலைகளையுடைய |
| கடல் |
– |
கடலில் |
| சேர்ப்பன |
– |
கண்வளர்ந்தருளுமவனும், |
| முது அறிவு ஆளர் |
– |
முதிர்ந்த அறிவையுடைய நித்யஸூரிகளுக்கு |
| முதல்வன் |
– |
தலைவனம், |
| பத்தர்க்கு |
– |
அடியார்களுக்கு |
| அமுதன் |
– |
அம்ருதம்போல் இனியனுமான எம்பெருமானுக்கு |
|
அடியேன் (யான்) தாஸனாயினேன்; |
||
|
பண்டு அன்று பட்டினம் காப்பு |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ் ‘துப்புடையாரை” என்ற திருமொழியில், “எல்லையில் வாசல்குறுகச் சென்றாலெற்றி நமன்றமர்பற்றும்போது, நில்லுமினென்னுமுபாயமில்லை” என்ற குறைதீர இன்று அச்சங் கெட்டபடியை அருளிச்செய்கிறார், இப்பாட்டில் யமலோகத்தில், இவ்வுலகத்தின்கணுள்ள ஸர்வாத்மாக்களினுடையவும் பாபங்களைக் கணக்கிட்டு எழுதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சித்திரகுப்தனென்னுங் கணக்கப்பிள்ளை தன் தெய்வீகத்தன்மையால் ஸூரியன் சந்திரன் வாயு அக்நி ஆகாசம் பூமி வருணன் ஹ்ருதயம் யமன் பகல் இரவு காலை மாலை தருமம் என்ற பதினான்குபேர் ஸாக்ஷியாக ஒவ்வொருவரும் செய்த தீவினைகளையு மெழுதிவைப்பதுபோல ஒரு சுவடியில் என் தீவினைகளையுமெல்லா மெழுதி, அதன்மேல் யமனுடைய மேலெழுத்தையுமிடுவித்து அதனைப் பாதுகவாலாய் வைத்திருக்க, அதனை யமதூதர்கள் எடுத்துச் சுட்டுப்போட்டு ஓடி ஒளிந்து கொண்டனர்; இதற்கு அடி என்னெனில்; அயர்வறுமமாக்கனதிபதிக்கு நான் அடிமைப்பட்டதேயாகும். அது காரணமாக எனது ஆத்துமா அவ்வெம்பெருமானுடைய பாதுகாப்பை பெற்றிருக்கின்றபடியால் அவ்யமதூதர்கட்கு என்னை அணுகும்வழி என்னவே மென்றவாறு.
“தரணியில் பண்ணியயனார் தனித்தனிக் காத்தபிரான்
கருணையெலுங்கா அடித்திருமங்கையாள்வார் நற்பின்
திரணரகெண்ணிய சித்திரகுத்தன் தெரித்துவைத்த
கருணையிலெறிய சூர்வினைமுற்றுந் துரந்தனமே“
(தேசிகப்ரபந்தம்) என்ற பாசுரமிங்கு நினைக்கத்தக்கது. சித்திரகுத்தன் –?????? புலம் என்று திசைக்கும் பெயர். இலச்சினை – “***“ என்ற வடசொல்விகாரம். (தூதுவராடி யொளித்தார்.) “வள்ளலே! உன் தமர்க்கென்றும் நமன்தமர் கள்ளர்போல“ “நமன்றமாராலாராயப் பட்டறியர் கண்டீர் அரவனை மேற் பேராயற் காட்பட்டார் பேர்“ என்ற அருளி செயல்களுமறிக.
English Translation
Chitragupta’s verdict with the stamp affixed by Yama, King of the Southern Quarter, has been quashed; the messengers of death have fled. The lord who reclines in he pearly ocean, Lord of enlightened sages, the ambrosial delight of devotees, has made me his. No more like old, the fortress, is on guard!
