(443)

(443)

நெய்க்குடத் தைப்பற்றி ஏறும் எறும்புகள் போல்நிரந்து எங்கும்

கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெறஉய்யப் போமின்

மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்

பைக்கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே.

பதவுரை

நெய்க்குடத்தை

நெய் வைத்திருக்கும் குடத்தை
பற்றி

பற்றிக்கொண்டு
ஏறும்

(அக்குடத்தின்மேல்) ஏறுகின்ற
எறும்புகள் போல்

எலும்புகளைப் போல்
எங்கும்மிரந்து

என்னுடைய உடம்பு முழுவதும் பாலி
கைக்கொண்டு

(என்னை) வசப்படுத்தி

நிற்கின்ற (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற

நோய்காள்

வியாதிகளே!
காலம்பெற

விரைவாக

உய்ய (நீங்கள்) பிழைக்க வேண்டி

போமின்

(என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய்விடுங்கள்
வேதம் பிரானார்

(பிராமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான்.
பைக் கொண்ட

பரம்பினை படங்களையுடைய
பாம்பு அணையோடும்

திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட

எந்து புகுந்து  எழுந்தருளி

மெய்

(எனது) சரீரத்தை
கொண்டு

(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம்பற்றி
கிடந்தார்

(என் சரீரத்தை
கொண்டு

(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம்பற்றி
கிடந்தார்

(என் சரீரத்தினுள்ளே) பள்ளிகொண்டிரா நின்றார், ஆதலால்
பட்டினம்

(அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இல்லலாத்துமா
பண்டு அன்று

பழைய நிலைமையை உடையதன்று;

காப்பு (அவனால்) காக்கப்பெற்றது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அந்நிஹோத்ரஸமாராதநாதிகளுக்கு உதவும்படி சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெய்க்குடத்தை எறும்புகள் ஏறி ஆக்கிரமிப்பது போல, எம் பெருமானுக்குப் பல்லாண்டு பாடுகைக்கென்று சேமிக்கப்பட்டிருக்கின்ற எனது உடலை ஆக்கிரமித்துக்கொண்டு, நான்  உங்களுக்கு வசப்பட்டு ஒழுகும்படி என்னைக் கையாளாக்கிக்கொண்டு சாச்வதப்ரதிஷ்டையாக நின்றின்ற நோய்களே! இனி இவ்வாத்துமா உங்களுடைய ராஜ்யமன்று; இத்தனை நாளும்போல்ல இந்நாள்; எம்பெருமான் தனது படுக்கையோடுங்கூட விரும்பிப் பள்ளிகொண்டிருக்குமிடமாயிற்று இன்று இவ்வாத்துமா; ஆன பின்பு, அவனது காவலில் அகப்பட்ட இவ்வுடலிடத்து இனி உங்களுக்குப் பிழைத்திருக்க வழியில்லை; இன்னுஞ் சில நாளளவும் பிழைத்திருக்கு வேணுமொன்றவிருப்ப முங்களுக்கு உளதாகில்,இவ்விடத்தைவிட்டுச் சடக்கென ஓடிப்போங்கள் என்கிறார்கள்.

“பாம்பனையோடும் வந்து புகுந்துகிடந்தார்” என்றதனால், நித்யவாஸத்துக்காக எழுந்தருளினமை விளங்கும். பட்டினம்-  வதந மென்ற வடசொல் விகாரம்; ராஜதாநி என்பது பொருள்; ஆத்துமா எம்பெருமானுடைய ராஜதானியாதலறிக.

English Translation

O Ye sicknesses that plague the soul like a swarm of ants over a pot of Ghee! Flee and save yourselves. The Lord of the Vedas has entered my body and made it his abode, reclining on a serpent bed. No more like old, the fortress is on guard!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top