(418)

(418)

குறட்பிரம சாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசு வாங்கி

இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த எம்மான் கோயில்

எறிப்புடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல்

அரவணையின்வாய் சிறப்புடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவ ரங்கமே.

பதவுரை

குறள் பிரம சாரி ஆய்

வாமக ப்ரஹ்மசாரியாய் (எழுந்தருளி)
பக வலிமை

மஹாபலியினடைய
குறும்பு அதக்கி

செருக்கை அடக்கி
அரசு

(அவனுடைய) ராஜ்யமாயிருந்த பக்ஷமியை
வாங்கி

(தன்னுடையதாம் படி நீரேற்றுப்) பெற்று
இறைப் பொழுதில்

க்ஷணகாலத்துக்குள்
பாதாளம்

பாதாளலோகத்தை
கலவிருக்கை கொடுத்து

(அவனுக்கு) இருப்பிடமாகக் கற்பித்து
உதந்த

(இந்திரன் வேண்டுகோளைத் தலைக்கட்டினோம் என்று) மகிழ்நத
எம்மான்

எமது தலைவனான எம்பெருமான்    (எழுந்தருளியிருக்கிற)
கோயில்

கோயிலாவது
எறிப்பு உடைய

மிக்க ஒளியையுடைய
மணி வரை மேல்

நீலரத்ந பர்வதத்தின்மேல்
இள ஞாயிறு

காலஸூரியர்கள்
எழுந்தால் போல்

உதித்தாற்போல
அறவு அணை பின் வாய்

திருவனந்தாழ்வானிடத்து
சிறப்பு உடைய

அழகு பொருந்திய
பணங்கள் மிக

படங்களின்மேல்
செழு மணிகள்

செழுமை தங்கிய ரத்னங்களானவை
விட்டு எறிந்தும்

மிகவும் ஜ்வலியா நிற்கப்பெற்ற
திரு அரங்கம்

திருவரங்கமாம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மாவலினிடத்து மூன்றடி வாங்கி இரண்டிகளால் கீழ்மேலு லகங்களனைத்தையு மளந்துகொண்டு,  மூன்றாமடிக்கு இடம் கிடைக்காமல் அதனைத் தருமளவும் சிறைவைப்பாரைப்போலே அவனைப் பாதாளத்திற்கிடக்கும்படி தள்ளியவாறு கூறுவன, முன்னடிகள். “கலவிருக்கை கொடுத்து என்றது – அவ்விருப்பு சிறையிருப்பாகவன்றிகே ***-  பூமியாகக் கொடுத்த படியைப்பற்ற; கலவிருக்கையாவது- எநஞ்ச கலந்திருக்குமிருப்பிறே” என்ற வியாக்கியவாக்கியமாகி மறியத்தக்கது. பிரமசாரி – ***- . பாதாளம்- வடசொல்.

* பச்சைமாமலையோல் மேனியனான அழகியமணவாளன் சாய்ந்தருளப் பெறுகையால் அத்திருமேனியினது நிழலீட்டாலே கறுத்துத் தோன்றுகின்ற திருவனந்தாழ்வானுடைய படங்களின்மேல் செழுமணிகள் ஒளிவிடாநிற்பது- ஒரு நீலரத்னபர்வதத்தின்மேல் பல இளஞ்சூரியர்கள் உதித்தாற்போலு மென்பது, பின்னடி: இது இல்பொருளுவமை

English Translation

The Lord went to Mabali as a mendicant manikin, subdued his ego, took his kingdom, and in a trice gave him the nether world to rule. He resides by his own will in the temple of Tiru-Arangam. The hoods of his serpent Ananta shine with radiant gems, like several morning suns raised over a range of bright mountains.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top