(418)
குறட்பிரம சாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசு வாங்கி
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்துகந்த எம்மான் கோயில்
எறிப்புடைய மணிவரைமேல் இளஞாயிறு எழுந்தாற்போல்
அரவணையின்வாய் சிறப்புடைய பணங்கள்மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவ ரங்கமே.
பதவுரை
| குறள் பிரம சாரி ஆய் |
– |
வாமக ப்ரஹ்மசாரியாய் (எழுந்தருளி) |
| பக வலிமை |
– |
மஹாபலியினடைய |
| குறும்பு அதக்கி |
– |
செருக்கை அடக்கி |
| அரசு |
– |
(அவனுடைய) ராஜ்யமாயிருந்த பக்ஷமியை |
| வாங்கி |
– |
(தன்னுடையதாம் படி நீரேற்றுப்) பெற்று |
| இறைப் பொழுதில் |
– |
க்ஷணகாலத்துக்குள் |
| பாதாளம் |
– |
பாதாளலோகத்தை |
| கலவிருக்கை கொடுத்து |
– |
(அவனுக்கு) இருப்பிடமாகக் கற்பித்து |
| உதந்த |
– |
(இந்திரன் வேண்டுகோளைத் தலைக்கட்டினோம் என்று) மகிழ்நத |
| எம்மான் |
– |
எமது தலைவனான எம்பெருமான் (எழுந்தருளியிருக்கிற) |
| கோயில் |
– |
கோயிலாவது |
| எறிப்பு உடைய |
– |
மிக்க ஒளியையுடைய |
| மணி வரை மேல் |
– |
நீலரத்ந பர்வதத்தின்மேல் |
| இள ஞாயிறு |
– |
காலஸூரியர்கள் |
| எழுந்தால் போல் |
– |
உதித்தாற்போல |
| அறவு அணை பின் வாய் |
– |
திருவனந்தாழ்வானிடத்து |
| சிறப்பு உடைய |
– |
அழகு பொருந்திய |
| பணங்கள் மிக |
– |
படங்களின்மேல் |
| செழு மணிகள் |
– |
செழுமை தங்கிய ரத்னங்களானவை |
| விட்டு எறிந்தும் |
– |
மிகவும் ஜ்வலியா நிற்கப்பெற்ற |
| திரு அரங்கம் |
– |
திருவரங்கமாம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மாவலினிடத்து மூன்றடி வாங்கி இரண்டிகளால் கீழ்மேலு லகங்களனைத்தையு மளந்துகொண்டு, மூன்றாமடிக்கு இடம் கிடைக்காமல் அதனைத் தருமளவும் சிறைவைப்பாரைப்போலே அவனைப் பாதாளத்திற்கிடக்கும்படி தள்ளியவாறு கூறுவன, முன்னடிகள். “கலவிருக்கை கொடுத்து என்றது – அவ்விருப்பு சிறையிருப்பாகவன்றிகே ***- பூமியாகக் கொடுத்த படியைப்பற்ற; கலவிருக்கையாவது- எநஞ்ச கலந்திருக்குமிருப்பிறே” என்ற வியாக்கியவாக்கியமாகி மறியத்தக்கது. பிரமசாரி – ***- . பாதாளம்- வடசொல்.
* பச்சைமாமலையோல் மேனியனான அழகியமணவாளன் சாய்ந்தருளப் பெறுகையால் அத்திருமேனியினது நிழலீட்டாலே கறுத்துத் தோன்றுகின்ற திருவனந்தாழ்வானுடைய படங்களின்மேல் செழுமணிகள் ஒளிவிடாநிற்பது- ஒரு நீலரத்னபர்வதத்தின்மேல் பல இளஞ்சூரியர்கள் உதித்தாற்போலு மென்பது, பின்னடி: இது இல்பொருளுவமை
English Translation
The Lord went to Mabali as a mendicant manikin, subdued his ego, took his kingdom, and in a trice gave him the nether world to rule. He resides by his own will in the temple of Tiru-Arangam. The hoods of his serpent Ananta shine with radiant gems, like several morning suns raised over a range of bright mountains.
