(274)
அரவில் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு அரவப் பகையூர் தியவ னுடைய
குரவிற் கொடிமுல் லைகள்நின் றுறங்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடைமேல்
திருவிற் பொலிமா மறைவா ணர்புத்தூர்த் திகழ்பட் டர்பிரான் சொன்னமா லைபத்தும்
பரவு மனநன் குடைப்பத் தருள்ளார் பரமா னவைகுந் தம்நண் ணுவரே.
பதவுரை
| ஆரவில் |
– |
திருவனந்தாழ்வான்மீது |
| பள்ளி கொண்டு |
– |
(பாற்கடலில்) பள்ளி கொள்பவனும் |
|
(அதைவிட்டு ஆயற்பாடியில் வந்து பிறந்து) |
||
| அரவம் |
– |
காளியநாகத்தை |
| துரந்திட்டு |
– |
ஒழித்தருளினவனும் |
| அரவம் பகை ஊர்தி |
– |
ஸர்ப்பசத்ருவான கருடனை வாஹனமாக வுடையவனுமான கண்ணனுடைய, |
| குரலில் கொடி முல்லைகள் நின்று உறங்கும் |
– |
குரவமரத்தில் முல்லைக் கொடிகள் படர்ந்து அமைந்திருக்கப்பெற்ற |
| கோவர்த்தனம் என்னும் கொற்றம் குடை மேல் |
– |
கோவர்த்தனமென்ற கொற்றக்குடை விஷயமாக, |
| திருவில் |
– |
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயாலே |
| பொலி |
– |
விளங்காநின்றுள்ள |
| மறைவாணர் |
– |
வைதிகர்கள் இருக்குமிடமான |
| புத்தூர் |
– |
ஸ்ரீவில்லிபுத்தூரில் |
| பட்டர் பிரான் |
– |
பெரியழ்வார் |
| சொன்ன |
– |
அருளிச்செய்த |
| மாலை பத்தும் |
– |
இப்பத்துப்பாசுரங்களையும் |
| பரவும் மனம் |
– |
அப்யஸிக்கைக்கீடான மநஸ்ஸை |
| நன்கு உடை |
– |
நன்றாக ஊடையரான |
| பத்தர் உள்ளார் – |
– |
பக்தர்களாயிருப்பார் |
| பரமான வைகுந்தம் |
– |
பரமபத்ததை |
| நண்ணுவர் |
– |
அடையப்பெறுவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார் – இப்பாட்டால். திருவாய்ப்பாடியிற் பிறந்த காளியன் கொழுப்பையடக்கின கண்ணபிரான் க்ஷீராப்திசாயியும் கருடவாஹநனுமான ஸாக்ஷாத் பரமாத்துமா என்பதைத் தெளிவிக்கும்-முதலடி. அரவப் பகையூர்தியவனுடைய-அவன் எடுத்துதரித்த என்றவாறு, குரவமரமும் அதன்மேற் பரந்த கொடிமுல்லையும் நின்றுறங்கு மென்றது-தன்மை நவிற்சி, நன்கு பரவும் மனமுடை என்று மியைக்கலாம்: நன்கு-கு என்ற விகுதிபெற்ற பண்புப்பெயர். “வைகுந்த நண்ணுவரே” எனச் சந்தியாக வேண்டுமிடத்து, “வைகுந்த நண்ணுவரே” என நகரவொற்று மிக்கது, செய்யுளோசை நோக்கி; விரித்தல் விகாரம். (கக)
English Translation
This decad of songs by Pattarbiran of Srivilliputtur adorned by meritorious Vedic seers, sings of Govardhana mount, victoriously held as an umbrella by the Lord who sleeps on one serpent, Ananta, drove away another, Kaliya, and rides the enemy of them all, Garuda, Devotees with a heart to sing it well will enter Vaikunta, the highest abode.
