(268)
வானத் திலுள்ளீர் வலியீர் உள்ளீரேல் அறையோ வந்துவாங் குமினென் பவன்போல்
ஏனத் துருவா கியஈ சன்எந்தை இடவ னெழவாங் கியெடுத் தமலை
கானக் களியா னைதன்கொம் பிழந்து கதுவாய் மதம்சோ ரத்தன்கை யெடுத்து
கூனல் பிறைவேண்டி அண்ணாந்து நிற்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
பதவுரை
| எனத்து உரு ஆகிய |
– |
(முன்பு ஒரு காலத்திலே) வராஹரூபம் கொண்டருளின |
| ஈசன் |
– |
ஸ்வாமியாயும் |
| எந்தை |
– |
எனக்குத் தந்தையாயுமுள்ள கண்ணபிரான், |
| வானத்தில் உள்ளீர் |
– |
“மேலுலகத்திலிருப்பவர்களே! (நீங்கள்) |
| வலியீர் உள்ளீர் எல் |
– |
(என்னோடொக்க) வல்லமையுள்ளவர்களாயிருப்பீர்களாகில் |
| அறையோ |
– |
அறையோ அறை!! |
| வந்து |
– |
(இங்கே) வந்து |
| வாங்குமின் |
– |
(இம்மலையைக் கையால்) தாங்கிக்கொண்டு நில்லுங்கள்” |
| என்பவன் போல் |
– |
என்று, சொல்லுகிறவன் போல |
| இடவன் |
– |
ஒரு மண்கட்டி போலே |
| எழ வாங்கி |
– |
(அநாயஸமாகக்) கிளரப்பிடுங்கி |
| எடுத்த மலை |
– |
எடுத்துக்கொண்டு நிற்கப் பெற்ற மலையாவது; |
| கானம் |
– |
காட்டு நிலங்களில் |
| களி |
– |
செருக்கித் திரியக்கடவதான |
| யானை |
– |
ஒரு யானையானது |
|
(கரைபொருது திரியும்போது ஓரிடத்தில் குத்துண்டு முறிந்த) |
||
| தன் கொம்பு |
– |
தன் தந்தத்தை |
| இழந்து |
– |
இழந்ததனால் |
| கதுவாய் |
– |
அக்கொம்பு முறிந்து புண்பட்டவாயிலே |
| மதம் |
– |
மதநீரானது |
| சோர |
– |
ஒழுகா நிற்க |
| தன்கை |
– |
தனது துதிக்கையை |
| எடுத்து |
– |
உயரத்தூக்கி |
|
(ஆகாசத்தில் தோற்றுகின்ற) |
||
| கூன்நல்பிறை |
– |
வளைந்த அழகிய பிறையை (தானிழந்த கொம்பாக ப்ரமித்து)… |
| வேண்டி |
– |
(அதைப் பறித்துக்கொள்ள) விரும்பி |
| அண்ணாந்து நிற்கும் |
– |
மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கப்பெற்ற |
|
கோவா *** குடையே-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரான் மலையை விடாது வருந்தாது தாங்கிக்கொண்டு நிற்றலை ஒருவகையாக உத்ப்ரேக்ஷிக்கின்றார் – முதலடியினால்; நாம் ஆகாசத்திலே திளைத்தோமென்று இறுமாந்திருப்பவர்களே! நீங்கள் மெய்யே வலிவுள்ளவர்களாகில் இம்மலையைச் சிறிது தாங்குங்கள் பார்ப்போம் என்று தேவர்களை அழைப்பவன் போன்றுள்ளனென்க. அறையோ என்றது – பௌருஷம் தோன்ற மீசை முறுக்கிச் சொல்லும் வெற்றிப்பாசுரம். பாதாள லோகஞ்சென்று சேர்ந்த பூமியை ஒட்டு விடுவித்தெடுத்துத் திருஎயிற்றிலே தாங்கிநின்ற பெருமானுக்கு இம்மலையெடுக்கை அரிதன்றென்பார். “ஏனத்துருவாகியவீசன்” என்றார். இடவன் – மண்கட்டிக்குப் பெயர். பின்னடிகளின் கருத்து; ஒரு யானையானது கரைபொருது திரியும்போது ஓரிடத்திற் கொம்பைக்குத்தின வளவிலே அக்கொம்பு முறியப்பெற்று அவ்விடத்தில் மதநீரொழுகப்பெற்ற ஆற்றாமையாலே துதிக்கையைத் தூக்கிக்கொண்டு, வானத்தில் வளைந்து தோற்றும் இளந்திங்களைத் தானிழந்த கொம்பாக ப்ரமித்து அதனைப் பறித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் உயர்முகமாகவேயிருக்கும்படியைச் சொல்லியவாறு. கதுவாய் – குறையுற்ற இடம். அண்ணாத்தல் – மேல் நோக்குதல். இதற்கு உள்ளுறை பொருள்;- ஸம்ஸாரமாகிற மருகாந்தாரத்திலே களித்துத்திரிகிற ஆத்துமா தனது மமகாரமழியப்பெற்று மதமாத்ஸர்யங்களும் மழுங்கப்பெற்று ஸத்துவம் தலையெடுத்து அஞ்சலிபண்ணிக்கொண்டு ப்ரக்ருத்யாத்ம விவேகம் முதலிய ஞானங்களைப் பெறவிரும்பி ????னாயிருக்கும்படியைக் குறித்தவாறாம்: இது மகாரார்த்தமென்க.
English Translation
Lord my master, who had once come as a boar, lifted the mount like an earth-cold and seemed to call out “O gods in heaven, any strong one among you? Come, take this, I challenge!” That mount is Govardhana, where an elephant with a broken tusk stands up with a raised trunk on seeing the crescent moon, and bellows with a dribbling mouth.
