(264)

(264)

அட்டுக் குவிசோற் றுப்பருப் பதமும் தயிர்வா வியும்நெய் யளறும் அடங்கப்

பொட்டத் துற்றுமா ரிப்பகை புணர்த்த பொருமா கடல்வண் ணன்பொறுத் தமலை

வட்டத் தடங்கண் மடமான் கன்றினை வலைவாய்ப் பற்றிக் கொண்டுகுற மகளிர்

கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.

பதவுரை

குறமகளிர்

குறப்பெண்கள்,
வட்டம் தட கண்

வட்டவடிவான பெரிய கண்களை யுடையதும்
மடம்

(தனது தாய்க்கு) வசப்பட்டிருப்பதுமான
மான் கன்றினை

மான்குட்டியை
வலை வாய்

வலையிலே
பற்றிக்கொண்டு

அகப்படுத்தி

(பின்பு அதனைத் தங்களுடையதாக அபிமானித்து, அதற்கு)

கொட்டை

பஞ்சுச் சுருளின்
தலை

நுனியாலே
பால்

பாலை
கொடுத்து

எடுத்து ஊட்டி
வளர்க்கும்

வளர்க்கைக்கு இடமான
கோவர்த்தனம் என்னும்

‘கோவர்த்தநம்’ என்ற பெயரையுடையதும்
கொற்றம்

வெற்றியையுடையதுமான
குடை

குடையானது (யாதெனில்?)
அட்டு

சமைத்து
குவி

குவிக்கப்பட்ட
சோறு

சோறாகிற
பருப்பதமும்

பர்வதமும்
தயிர்

தயிர்த்திரளாகிற
வாவியும்

ஓடையும்
நெய் அளறும்

நெய்யாகிற சேறும்
அடங்க

ஆகிய இவற்றை முழுதும்
பொட்ட

விரைவாக (ஒரே கபளமாக)
துற்றி

அமுதுசெய்து விட்டு,

(இப்படி செய்கையினாலே இந்திரனுக்குக் கோபம் மூட்டி அவன் மூலமாக)

மாரி

மழையாகிற
பகை

பகையை
புணர்த்த

உண்டாக்கின
பொரு மா கடல் வண்ணன்

அலையெறிகிற பெரிய கடலினது நிறம்போன்ற நிறத்தனான கண்ணபிரான்
பொறுத்த

(தனது திருக்கைவிரலால்) தூக்கின
மலை

மலையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “துன்னுசகடத்தாற்புக்க பெருஞ்சோற்றை”  என்றபடி வண்டி வண்டியாக வந்து திரண்டு கிடந்த சோற்றின் மிகுதியைக் கொண்டு ‘சோற்றுப் பகுப்பதம்’ எனப்பட்டது.  மலையில் ஓடைகளுஞ் சேறுகளும் இன்றியமையாதனவாதலால், இங்குத் தயிர்த்திரளை ஓடையாகவும் நெய்ப்பெருக்கைச் சேறாகவும் உருவகப்படுத்தினரென்க.  சோற்றுத்திரளில் தொட்டியாகக்கட்டி அதில் தயிரையும் நெய்யையும் நிறைத்தமை தோற்றும்.  ‘நெடுநாளாக இந்திரனுக்குச் செய்துவந்த இப்பூஜையை நீ உனக்காக்கிக் கொள்ளவொட்டோம்’ என்று சில இடையர் மறுப்பர்களோ என்று சங்கித்துப் பொட்டத்துற்றினானாயிற்று; ஓர் இமைப்பொழுதளவில் அவற்றையெல்லா மமுதுசெய்திட்டனன்.  இவன் இவ்வாறு செய்யவே, பூஜையை இழந்த இந்திரன் பசிக்கோபத்தினால் புஷ்கலாவர்த்தம் முதலிய மேகங்களை ஏவி விடாமழை பெய்வித்ததனால் அம்மழையாகிற பகைக்குக் கண்ணபிரான் காரணமானமைப்பற்றி ‘மாரிப்பகைபுணர்த்த’ என்றார்.

பின்னிரண்டடிகளின் கருத்து :-  குறப்பெண்கள் அழகிய மான்களை வளர்க்கவிரும்பி அவற்றை வலைவைத்துப் பிடிப்பித்துத் தங்கள் குடங்காலில் அவற்றை இருத்திப் பஞ்சுச்சுருள்களின் நுனியால் அவற்றுக்குப் பாலூட்டி வளர்க்கப்பெற்ற மலை என்றவாறு.  அவை அப்பஞ்சுச் சுருளின் நுனியைத் தன் தாய் முலையாகப் பாவித்து உறிஞ்சுமென்க.

அட்டு என்ற வினையெச்சத்தில் அடு என்ற குறிலிணைப்பகுதி ஒற்றிரட்டி இறந்தகாலங் காட்டிற்று.  ஊர்வசியை உருப்பசி என்னுமாபோலே, பர்வதத்தைப் பருப்பதமென்கிறது.  வாலி – வாவீ.  வட்டம் – வ ??  ம் என்ற வடசொல் விகாரம்; ??????? தம் என்ற வடசொல் ‘நட்டம்’ என வருதல் போல.  வலைவாய் = வாய் – ஏழனுருபு.  குறமகளிர் – குறிஞ்சிநில மக்கள்.  கொட்டைத்தலை – மூன்றாம் வேற்றுமைத் தொகை.  பசுக்களுக்குப் புல்லுந்தண்ணீரும் நிரம்பக்கொடுத்து வளர்த்ததனால் ???   நம் என்பது காரணப்பெயர்.  பெருதத்மழையை வென்று ஒருவர் மேல் ஒரு நீர்த்துளி விழாதபடி கவிந்து நின்றமை பற்றிக் ‘கொற்றக்குடை’ எனப்பட்டது.  கொற்றம் – ஜயம்.  கடல் வண்ணன் பொறுத்தமலை – கோவர்த்தனமென்னும் கொற்றக்குடையாம் என்று முறையே இயைப்பினுமிழுக்காகாது.

துற்றி – ‘துற்று’ என்னும் பகுதினடியாப் பிறந்தவினையெச்சம்.  “துற்று”  என்றே பலர் ஓதுவர்.

இத்திருமொழியில் சில பாட்டுகளின் பின்னிரண்டடிகளுக்கு உள்ளுறை பொருள் (ஸ்வாபதேசார்த்தம்) கூறக்கடவோம்.  இதற்கு உள்ளுறைபொருள் யாதெனில்;- (வட்டம் – ???.) தனது வர்ணாச்ரமவ்ருத்தத்தில் விசாலமான ஞானத்தையும், அதனை உபதேசித்தருளின ஆசிரியர்கள் பக்கல் ???தையையும், ஸ்வரக்ஷணத்தில் அசக்தியையுமுடையானொருவனை ஆசாரியனானவன் “வாசுதேவன் வலையுளே”  என்றபடி – எம்பெருமானாகிற வலையிலகப்படுத்தி, அவனுக்கு ஸகலவேத சாஸ்திரதாத்பரியமாய் பாலோடு அமுதன்னவாயிரமாகிய திருவாய்மொழியை உரைத்து வளர்க்குந்தன்மையைச் சொல்லிற்றாகிறது; எனவே, இப்படிப்பட்ட மஹானுபாவர்கள் உறையுமிடமென்று அம்மலையின் சிறப்பைக் கூறியவாறாம்.

English Translation

Gulping cooked rice heaped high, curds in pots and melted Ghee all in a trice, the deep ocean-hued Lord invited unfriendly rains, then for an umbrella, victoriously lifted a mount. That mount is Govardhana where gypsies catch wide-eyed fawns in nets and bring them up feeding them with milk through cotton wicks.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top