(253)
புற்றர வல்குல் அசோதைநல் லாய்ச்சி தன்புத் திரன்கோ விந்தனை
கற்றினம் மேய்த்து வரக்கண் டுகந்துஅவள் கற்பித்த மாற்ற மெல்லாம்
செற்ற மிலாதவர் வாழ்தரு தென்புது வைவிட்டு சித்தன் சொல்
கற்றிவை பாடவல் லார்கடல் வண்ணன் கழலிணை காண்பார் களே.
பதவுரை
| புற்று |
– |
புற்றிலே (வளர்கின்ற) |
| அரவு |
– |
பாம்பின் படத்தை ஒத்த |
| அல்குல் |
– |
அல்குலை உடையளாய் |
| அசோதை |
– |
யசோதையென்னும் பெயரையுடையளாய் |
| நல் |
– |
(பிள்ளை திறத்தில்) நன்மையையுடையளான |
| ஆய்ச்சி |
– |
ஆய்ச்சியானவள் |
| தன் புத்திரன் |
– |
தன் மகனான |
| கோவிந்தனை |
– |
கண்ணபிரானை |
| கன்று இனம் மேய்த்துவர கண்டு |
– |
கன்றுகளின் திரளை (க்காட்டிலே) மேய்த்து விட்டு மீண்டுவரக்கண்டு |
| உகந்து |
– |
மனமகிழ்ந்து |
| அவள் |
– |
அவ்யசோதை |
|
(அம்மகனைக் குறித்து இன்னபடிசெய் என்று) |
||
| கற்பித்த |
– |
நியமித்துக் கூறிய |
| மாற்றம் எல்லாம் |
– |
வார்த்தைகளையெல்லாம்; |
| செற்றம் இலாதவர் |
– |
அஸூயையற்ற ஸ்ரீவைஷ்ணவர்கள் |
| வாழ்தரு |
– |
வாழுமிடமான |
| தென் |
– |
அழகிய |
| புதுவை |
– |
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு நிர்வாஹகரான |
| விட்டு சித்தன் |
– |
பெரியாழ்வார் |
| சொல் |
– |
அருளிச்செய்த |
| இவை |
– |
இப்பாசுரங்களை |
| கற்று |
– |
(ஆசார்யமுகமாக) ஓதி |
| பாட வல்லார் |
– |
(வாயாரப்) பாடவல்லவர்கள் |
| கடல்வண்ணன் |
– |
கடல்போன்ற நிறத்தனான எம்பெருமானுடைய |
| கழல் இணை |
– |
திருவடியிணைகளை |
| காண்பார்கள் |
– |
கண்டு அநுபவிக்கப் பெறுவர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார். ‘புற்றரவல்குலசோதை’ என்று – சமுரகுணமும், ‘நல்’ என்று ஆத்மகுணமுஞ் சொல்லிற்றாகக் கொள்க. கற்பித்த மாற்றம் – இத்திருமொழியில், மூன்றாம் பாட்டிலும் ஒன்பதாம்பாட்டிலும் நியமித்தவாறு காண்க. வாழ்தரு = தரு – துணை வினை.
ஹஅடிவரவு :- சீலை கன்னி காடு கடி பற்றார் அஞ்சுடர் பன்றி கேட்டு திண்ணார் புற்று தழை.
English Translation
This decad of songs by Vishnuchitta of Srivilliputtur where the pure-hearted ones live, recalls the words of the slim-waisted Yasoda, the good cowherd-dame, expressing her joy on seeing her son Govinda return from the pastures with the calves. Those who can sing it will see the lotus feet of the ocean-hued Lord.
