(226)

(226)

மையார் கண்டமட வாய்ச்சியர் மக்களை மையன்மை செய்துஅவர் பின்போய்

கொய்யார் பூந்துகில் பற்றித் தனிநின்றுகுற்றம் பலபல செய்தாய்

பொய்யா உன்னைப் புறம்பல பேசுவ புத்தகத் துக்குள கேட்டேன்

ஐயா உன்னை அறிந்துகொண் டேன்உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே.

பதவுரை

மை ஆர் கண்

மையை அணிந்துள்ள கண்களையும்
மடம்

மடப்பம் என்ற குணத்தையுமுடையரான
ஆய்ச்சியர் மக்களை

இடைப் பெண்களை

(உன் விஷயத்திலே)

மையன்மை செய்து

மோஹிக்கப்பண்ணி

(அப்பெண்களுடைய)

கொய் ஆர் பூ துகில்

கொய்தல் நிறைந்த அழகிய புடவைகளை
பற்றி

பிடித்துக்கொண்டு
அவர் பின் போய்

அப்பெண்களின் பின்னேபோய்
தனி நின்று

தனியிடத்திலேநின்று
பலபல குற்றம்

எண்ணிறந்த தீமைகளை
செய்தாய்

(நீ) பண்ணினாய்;

(என்று யசோதை சொல்ல,’ நீ கண்டாயோ?’ என்று கண்ணன் கேட்க)

(அதற்கு யசோதை சொல்கிறாள்;)

பொய்யா

(தீ மை செய்ததுமல்லாமல், செய்யவில்லையென்று) பொய் சொல்லு மவனே!
உன்மை

உன்னைக் குறித்து
புத்தகத்துக்கு உள

ஒருபுஸ்தக மெழுதுகைக்குத் தகுந்துள்ளனவாம்படி
பேசுவ

சொல்லப்படுகின்றனவான
பல புறம்

பற்பல உன் சொற்கள்
கேட்டேன்

(என் காதால்) கேட்டிருக்கின்றேன்;
ஐயா

அப்பனே

(உன்னை அறிந்து கொண்டேன்;)

உனக்கு அம்மம் தர அஞ்சுவன்;

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீ இடைப் பெண்களுடைய கொய்சகத்தைப் பிடித்துக் கொண்டு அவர்கள் பின்னே போய் அவர்களோடு ஏகாந்தமான இடத்திலே இருந்து சொல்லத்தகாத தீம்புகளைச் செய்தாய்; நீ செய்யும் தீம்புகளைப் பிறர் அறிந்து சொல்லும் அவற்றை எழுதத்தொடங்கினால் பெரியதொரு புஸ்தகமாக முடியும். அதனால், உலகத்தாரால் செய்யமுடியாதவற்றையும் செய்யவல்ல அதிமாநுஷத் தன்மையை யுடையவனென்று உன்னை அறிந்து கொண்டேன்; ஆதலால் உனக்கு அம்மந்தர அஞ்சுவேனென்பதாம். முதலடியில் “மக்களை” என்பதை உருபுமயக்கமாகக்கொண்டு ‘மக்கள் பக்கலிலே’ என ஏழாம் வேற்றுமைப் பொருளானது, மையன்மை செய்து – மோஹத்தைப் பண்ணி என்றுரைத்து கண்ணபிரான் தான் அம்மக்களிடத்தில். மயக்கமுற்று, அவர்கள் இவனை மறுத்த போதிலும் இவன் விடாமல் அவர்களுடைய புடவைகளைப் பற்றிக்கொண்டு ஏகாந்த ஸ்தலத்திற்சென்று பற்பல சிருங்கார சேஷ்டைகளைச் செய்தபடியைக் கூறுவதாகக் கருத்துரைத்தலும் ஒக்குமென்க. மடமக்கள்-மடமாவது-அறிந்தும் அறியாதுபோலிருத்தல் மாதர்க்கு நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என நற்குணங்கள் அமையவேண்டுமென்று அறிக. மையல் எனினும் மையன்மை எனினும் மயக்கமே பொருளாம்; மை-பண்புப்பெயர் விகுதி; விகுதிமேல் விகுதி கொய்யார் பூந்துகில்=கொய்சகம்; ‘கொசாம்’ என்பது உலக வழக்கு. ‘பேசுவ’ என்கிறவிது பலவின்பால் படர்க்கை வினைமுற்று; அது இங்கு பெயரெச்சப்பொருள் தந்து நிற்றல் காண்க. வினைமுற்று வினையெச்சமாகலும் குறிப்பு முற்றெச்சமாகலும் உளதே, என்ற சூத்திரத்தில் ‘ஆகலும்’ என்ற(எண்ணி நின்ற எதிரது தழுவிய எச்ச) உம்மையை நோக்குக.

English Translation

Infatuating cowherd girls with large Kajal-lined eyes, you go after them and steal their frilled Sarees, then do many many wrongs. O False One, the complaints I hear about you could fill a book. O Master! I know you now, I fear to give you suck.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top