(166)

(166)

கற்றினம் மேய்த்துக் கனிக்குஒரு கன்றினை

பற்றி யெறிந்த பரமன் திருமுடி

உற்றனபேசிநீ ஓடித் திரியாதே

அற்றைக்கும் வந்துகுழல் வாராய்அக் காக்காய் ஆழியான் தன்குழல் வாராய்அக் காக்காய்.

பதவுரை

அக்காக்காய்!-

நீ

நீ
உற்றன

(உன் ஜாதிக்குத்) தகுந்தவற்றை
பேசி

சொல்லிக்கொண்டு
ஓடி

அங்குமிங்கும் பறந்து
திரியாதே

திரியாமல்,-
கன்று இனம் மேய்த்து

கன்றுகளின் கூட்டத்தை மேய்த்துவந்து
ஒரு கன்றினை

(அஸுராவிஷ்டமான) கன்றொன்றை
பற்றி

பிடித்து
கனிக்கு

(அஸுராவிஷ்டமான) விளாம்பழத்தை உதிர்த்ததற்காக
எறிந்த

(குணிலாக) வீசின
பரமன்

பரமபுருஷனுடைய
திருமுடி

அழகிய தலைமுடியை
அற்றைக்கும் வந்து

அவ்வக்காளும் வந்து
குழல்வாராய்

வாருவாயாக
ஆழியான் தன்

சக்ராயுதபாணியான இவனுடைய

குழல் வாராய் –

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

முள்ளை முள்ளாற் களைவதுபோல அஸுரனை அஸுரனைக் கொண்டெ களைந்தனன் என்க. கன்று + இனம் = கன்றினம்.  அற்றைக்கும் – ‘அன்று’ என்னும் மென்றொடர்க் குற்றியலுகரம், வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்று ‘அற்றை’ என்றாகும்.  அதன்மேல், கு – சாரியை. ஆழியான் – “ஆழி கொண்டுன்னை யெறியும்”  என்றவிடத்துக் கருத்தை நினைக்க.

English Translation

When grazing the calves he picked up a calf by its feet, swirled it and let it go, hitting a wood-apple tree. O Raven, now do not go around chattering come here and comb the coiffure of the Lord who wields the discus. Comb his hair, come and comb his hair everyday.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top