(166)
கற்றினம் மேய்த்துக் கனிக்குஒரு கன்றினை
பற்றி யெறிந்த பரமன் திருமுடி
உற்றனபேசிநீ ஓடித் திரியாதே
அற்றைக்கும் வந்துகுழல் வாராய்அக் காக்காய் ஆழியான் தன்குழல் வாராய்அக் காக்காய்.
பதவுரை
|
அக்காக்காய்!- |
||
| நீ |
– |
நீ |
| உற்றன |
– |
(உன் ஜாதிக்குத்) தகுந்தவற்றை |
| பேசி |
– |
சொல்லிக்கொண்டு |
| ஓடி |
– |
அங்குமிங்கும் பறந்து |
| திரியாதே |
– |
திரியாமல்,- |
| கன்று இனம் மேய்த்து |
– |
கன்றுகளின் கூட்டத்தை மேய்த்துவந்து |
| ஒரு கன்றினை |
– |
(அஸுராவிஷ்டமான) கன்றொன்றை |
| பற்றி |
– |
பிடித்து |
| கனிக்கு |
– |
(அஸுராவிஷ்டமான) விளாம்பழத்தை உதிர்த்ததற்காக |
| எறிந்த |
– |
(குணிலாக) வீசின |
| பரமன் |
– |
பரமபுருஷனுடைய |
| திருமுடி |
– |
அழகிய தலைமுடியை |
| அற்றைக்கும் வந்து |
– |
அவ்வக்காளும் வந்து |
| குழல்வாராய் |
– |
வாருவாயாக |
| ஆழியான் தன் |
– |
சக்ராயுதபாணியான இவனுடைய |
|
குழல் வாராய் – |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
முள்ளை முள்ளாற் களைவதுபோல அஸுரனை அஸுரனைக் கொண்டெ களைந்தனன் என்க. கன்று + இனம் = கன்றினம். அற்றைக்கும் – ‘அன்று’ என்னும் மென்றொடர்க் குற்றியலுகரம், வன்றொடராய் ஐகாரச்சாரியை பெற்று ‘அற்றை’ என்றாகும். அதன்மேல், கு – சாரியை. ஆழியான் – “ஆழி கொண்டுன்னை யெறியும்” என்றவிடத்துக் கருத்தை நினைக்க.
English Translation
When grazing the calves he picked up a calf by its feet, swirled it and let it go, hitting a wood-apple tree. O Raven, now do not go around chattering come here and comb the coiffure of the Lord who wields the discus. Comb his hair, come and comb his hair everyday.
