(150)
வாவென்று சொல்லிஎன் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கில் உனக்கிங் கிழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழம்கொண்டு வைத்தேன் இவைகாணாய் நம்பீமுன் வஞ்ச மகளைச்
சாவப்பா லுண்டு சகடிறப் பாய்ந்திட்ட தாமோத ராஇங்கே வாராய்.
பதவுரை
|
(கண்ணன் யசோதையைப் பார்த்து) |
||
| வா என்று சொல்லி |
– |
‘(நான் காதில் திரியிட இங்கே) வருவாயாக‘ என்று சொல்லி |
| என் கையை பிடித்து |
– |
என் கையைப் பிடித்துக் கொண்டு |
| காதில் |
– |
காதிலே |
| நோவ |
– |
நோம்படி |
| கடிப்பை |
– |
காதணியை |
| இங்கு |
– |
இப்போது |
| வலியவே |
– |
பலாத்காரமாக |
| தரிக்கில் |
– |
இட்டால் |
| உனக்கு |
– |
உனக்கு |
| இழுக்கு உற்ற(து) என் |
– |
சேதமுண்டானதென்ன? |
| காதுகள் |
– |
(என்) காதுகள் |
| நொந்திடும் |
– |
நோவெடுக்கும் |
| கில்லேன் |
– |
(அதைப் பொறுக்கவல்ல) வல்லமையுடையேனல்லேன் |
|
(என்று மறுத்துச் சொல்ல – யசோதை சொல்லுகிறாள்-) |
||
| நம்பீ |
– |
பூர்ணனே’ |
| நாவல் பழம் |
– |
(உனக்கு இஷ்டமான) நாவற்பழங்களை |
| கொண்டு வைத்தேன் |
– |
கொண்டு வைத்திருக்கிறேன் |
| இவை |
– |
இவற்றை |
| காணாய் |
– |
பார்ப்பாயாக |
| முன் |
– |
முன்பு |
| வஞ்சம் மகள் |
– |
வஞ்சனையுள்ள பூதனையானவள் |
| சாவ |
– |
மாளும்படி |
| பால் |
– |
(அவளது) முலைப்பாலை |
| உண்டு, |
– |
பாநம் பண்ணி, |
| சகடு |
– |
சகடாஸுரன் |
| இற |
– |
முறியும்படி |
| பாய்ந்திட்ட |
– |
(கால்களைத்) தூக்கியுதைத்த |
|
தாமோதரா’ இங்கே வாராய் – |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
English Translation
O Damodara, You say “Asking me to come, I know you will grab my hand and forcibly thread the pendants, hurting me. What difference does it makes to you? It will hurt. No, I will not come”. I have kept Rose-apple fruit for you, take a look. O lord who killed the ogress by sucking her breast, Lord who smote the cart to places, come hither!
