(117)
ஆய்ச்சியன் றாழிப் பிரான்புறம் புல்கிய
வேய்த்தடந் தோளிசொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழிவை ஈரைந்தும் வல்லவர்
வாய்த்தநின் மக்களைப் பெற்று மகிழ்வரே.
பதவுரை
| வேய் |
– |
மூங்கில் போன்ற |
| தடந் |
– |
பெரிய |
| தோளி |
– |
தோள்களையுடையனான |
| ஆய்ச்சி |
– |
யசோதையானவன் |
| ஆழிபிரான் |
– |
சக்ராயுததானாகிய ப்ரபுவான கண்ணன் |
| அன்று |
– |
அக்காலத்திலே |
| புறம்புல்கிய |
– |
புறம்புல்குவதைக் கூறிய |
| சொல் |
– |
சொல்லை |
| விட்டுசித்தன் |
– |
பெரியாழ்வார் |
| மகிழ்ந்து |
– |
(தாம் அநுபவித்து) ஸந்தோஷித்து |
| ஈந்த |
– |
(உலகத்தார்க்கு) உபகரித்த |
| தமிழ் இவை ஈர் ஐந்தும் |
– |
தமிழ்ப்பாசுரமாகிய இப்பத்துப் பாசுரங்களையும் |
| வல்லவர் |
– |
ஓதவல்லவர்கள் |
| வாய்த்த |
– |
(மங்களாசாஸநத்தில் விருப்பம்) பொருந்தி |
| நல் மக்களை |
– |
நல்ல புத்திரர்களை |
| பெற்று |
– |
அடைந்து |
| மகிழ்வர் |
– |
ஆநந்திப்பர்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
‘ஈந்த’ என்ன வேண்டியது – செய்யுளின்பம் நோக்கி ஈத்த என்று கிடக்கிறது. நன்மக்கள் – சிஷ்யர்களென்றுமாம். இப்பத்து – ஒன்பது திருமொழிகளிலேயே நூறுபாசுரங்களாய் விட்டபடியால் இவ்வொன்பது திருமொழியிலேயே முடிந்ததென்க.
அடிவரவு – வட்டு கிண்கிணி கத்த நாந்தகம் வெண்கலம் சத்திரம் பொத்த மூத்தவை கற்பகம் ஆய்ச்சி மெச்சூது.
English Translation
This decad of sweet songs by Vishnuchitta regales beautiful Yasoda’s “embrace- from-behind” game with the discus Lord. Those who master is will enjoy the company of good children.
