(47)
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,
செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!
பதவுரை
| சங்கில் |
– |
சங்குகளில்(சிறந்த) |
| வலம்புரியும் |
– |
வலம்புரிச்சங்கையும் |
| சே அடி |
– |
செவ்விய திருவடிகளில் (சாத்தத்தகுந்த) |
| கிண்கிணியும் |
– |
சதங்கையையும் |
| அம் கை |
– |
அழகிய கைகளுக்கு உரிய |
| சரி |
– |
முன் கை வளைகளையும் |
| வளையும் |
– |
தோள்வளைகளையும் |
| நாணும் |
– |
பொன்னரை நாணையும் |
| அரை தொடரும் |
– |
அரைவடத்தையும் |
| அம் கண் |
– |
அழகியதாய் விசாலமான |
| விசும்பில் |
– |
ஸ்வர்க்கத்திலுள்ள |
| அமரர்கள் |
– |
தேவர்கள் |
| போத்தந்தார் |
– |
அனுப்பினார்கள் |
| செம் கண் |
– |
சிவந்த கண்களையுடையையாய் |
| கருமுகிலே |
– |
கானமேகம் போன்ற வடிவையுமுடையையான கண்ணனே! |
|
தாலேலோ! |
||
| தேவகி |
– |
தேவகியின் வயிற்றிற்பிறந்த |
| சிங்கமே |
– |
சிங்கக் குருகே! |
|
தாலேலோ! |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – தேவதைகள் பலர் கூடிப் பல திருவாபரணங்களை அனுப்புகிறார்களென்று சொல்லித் தாலாட்டுகிறாள்.
சங்கில் + வலம்புரி, சங்கின் வலம்புரி,‘ ‘குறில்செறியாலன அல்வழிவந்த. . . ’என்ற நன்ணூற் சூத்திரத்திள் இறுதியில் ‘பிற’ என்றமிகையை நோக்குக. நான் திருமார்வுக்கு அலங்காரமாகச் சாத்தத்தக்க நாணாகவுமாம். செங்கண் + கருமுகில், செங்கட்கருமுகில். கருமுகிலே! முற்றுவமை.
English Translation
Gods of the wide sky have sent these jewels of dextral conch, anklets, bangles, chains and waist thread. O, Red-eyed cloud-hued Lord, Talelo. O, Devaki’s lion club, Talelo.
