(913)
பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்
தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க
வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே.
பதவுரை
|
மதில் திருவரங்கத்தானே!-; |
||
| ஒழுகல் ஆறு |
– |
பிரமன் முதல் தங்களளவும் நீண்டு வருகிற பரம்பரையில் |
| பழுது இலா |
– |
ஒருகுற்றமு மற்றிருக்குமவர்களாய் |
| பல சதுப்பேதிமார்கள் |
– |
நான்கு வேதங்களையும் ஓதினவர்களாயுமுள்ளவர்களே! |
| எம் அடியார்கள் ஆகில் |
– |
“நமக்கு அடிமைப்பட்டவர் களாயிருந்தால் (அவர்கள்) |
| இழி குலத்தவர்களேனும் |
– |
தாழ்ந்த வகுப்பில் பிறந்தார்களே யாகிலும் |
| நீர் |
– |
நீங்கள் |
| தொழுமின் |
– |
(அவர்களைத்) தொழுங்கள்; |
| கொடுமின் |
– |
(உங்களிடத்திலுள்ள விசேஷார்த்தங்களை அவர்களுக்கு) உபதேசியுங்கள்; |
| கொள்மின் |
– |
(அவர்களிடத்தில் விசேஷார்த்தங்க ளுண்டாகில் கேட்டுக் கொள்ளுங்கள் |
| என்று |
– |
என்று உபதேசித்தருளி |
| நின்னோடும் ஒக்க |
– |
உனக்கு ஸமமாக |
| வழிபட |
– |
அவர்களை ஆராதிக்கும்படி |
| அருளினாய் |
– |
உரைத்தருளினாய் |
|
(போல்-அசை). |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உத்பத்தியிலாவது ஆசாரம் முதலியவற்றிலாவது ஒருவகையாலும் குறையின்றியே ஸத்ஸந்தாந ப்ரஸூதர்களாய் ஸதாசார்நிஷ்டர்களா யிருக்கும் சதுர்வேதிகளை நோக்கி எம் பெருமான் கூறின வார்த்தை;- ‘ஓ சதுர்வேதிகளே’ உங்களைப்போலே, ப்ரஹ்மாதொடங்கி நெடுகிவருகிற வம்சப்ரவாஹத்திலே பிறந்து சதுர்வேதிகளா யிருப்பவர்கள் தாம் பூஜ்யர், மற்றையோர் அநாதரணீயர் என்று நீங்கள் பாவிக்கலாகாது; எந்த ஜாதியிலே பிறந்தவரேனும் எனது அடியவர்களானால் அவர்களை நீங்கள் தொழவேணும்; பரஸ்பரம் ஜ்ஞாநத்தைக் கொடுத்துக்கொள்ளலாம். விசேஷமாகச் சொல்வதேன்? என்னை நீங்கள் எவ்விதமாக ஆராதிக்க உடன்பட்டிருக்கிறீர்களோ, அவ்விதமாகவே அவர்களையும் ஆராதிக்க வேண்டியது தான்” என்று ஸ்ரீபாஞ்சராத்ரத்திலே “பக்தி ரஷ்டவிதா ஹ்யேஷா” என்று தொடங்கி “தஸ்மைதேயம் ததோக்ராஹ்யம் ஸசபூஜ்யோ யதாஹ்யஹம்” என்பதீறாகவுள்ள ச்லோகங்களை நோக்குக.
ஆசார்யஹ்ருதயத்தில் -“ம்லேச்சனும் பக்தனானால் சதுர்வேதிகள் அநுவர்த்திக்க அறிவுக் கொடுத்துக் குலதைவத்தோடொக்கப் பூஜைகொண்டு பாவநதீர்த்த ப்ரஸாதனா மென்கிற திருமுகப்படியும்”, என்னும் ஸ்ரீஸூக்தியும் அதன் வ்யாக்யாந ஸ்ரீஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கக்கடவன.
English Translation
Faultless well-bred ones, well versed in the four Vedas, — even if born in poor families, — if they are your devotees, you treat them on par with yourself, worthy of worship, saying, “Revere them, give them, take to them.” O Lord of walled Arangama-nagar!
