(861)

(861)

தூயனாயு மன்றியும்சு ரும்புலாவு தண்டுழாய்

மாயநின்னை நாயினேன்வ ணங்கிவாழ்த்து மீதெலாம்

நீயுநின்கு றிப்பினிற்பொ றுத்துநல்கு வேலைநீர்ப்

பாயலோடு பத்தர்சித்தம் மேயவேலை கண்ணனே.


பதவுரை

கரும்பு உலாவு

வண்டுகள் உலாவப்பெற்ற
தண் துழாய்

குளிர்ந்த திருத்துழாய் மாலையையுடைய
மாய!

ஆச்சர்ய சந்தியுக்தனான பெருமானே!
நாயினேன்

நீசனான அடியேன்
தூயனாயும்

பரிசுத்தனாகவோ
அன்றியும்

பரிசுத்தனல்லாதவனாகவோ
நின்னை

தேவரீரை
வணங்கி

ஸேவித்து
வேலை நீர்  பாயலோடு

திருப்பாற்கடலாகிற படுக்கை யோடுங்கூட
பக்தர் சித்தர்

பக்தர்களுடைய ஹ்ருதயத்திலே
மேய

குடியிருக்கின்ற
வேலைவண்ணனே!

கடல்வண்ணனே!
வாழ்த்தும் இது எலாம்

துதிப்பதாகிற இதனையெல்லாம்
நீயும்

(ஸர்வஸஹிஷ்ணுவான) தேவரீரும்
நின் குறிப்பினில் பொறுத்து

திருவுள்ளத்திலே க்ஷமித்திருள்
நல்கு

அநுக்ரஹம் செய்ய வேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தூயனாயும் அன்றியும் = என்னை ஒருவிதத்திலே பார்த்தால் பசுசுத்ததென்னலாம்; மற்றொருவிதத்திலே பார்த்தால் அபரிசுத்தனென்றும் சொல்லலாம்;- தேவரீரைப் பரமனை பரிசுத்தாக அநுஸந்திப்பதே எனக்கு சுத்தியாதலால் அந்த விதத்தாலே அடியேன் சுத்தனாகவுமாம்; அஹங்கார மமகாரங்களால் நிறைந்திருக்றேனாதலால் அந்த விதத்தாலே அபரிசுத்தனாகவுமாம்; சுத்தனாயோ அசுத்தனாயோ தேவரீரை வணங்கித் துதித்துவிட்டேன்; இனி க்ஷமிப்பதே நலம்.

English Translation

O Lord who wears a Tulasi wreath, O Lord of hue like ocean-deep! O Lord who lies in Ocean and the hearts of all the serving meek! O Lord the service, good or bad, by lowly-self this dog-begone, –pray take a note through gaze of love for those who seek your feet alone

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top