(848)

(848)

வெய்யவாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்துசீர்க்

கையசெய்ய போதில்மாது சேருமார்ப நாதனே

ஐயிலாய வாக்கைநோய றுத்துவந்து நின்னடைந்து

உய்வதோரு பாயம்நீயெ னக்குநல்க வேண்டுமே.

பதவுரை

வெய்ய ஆழி

(எதிரிகள்மேல்) தீக்ஷ்ணமான திருவாழியையும்
சங்கு தண்டு வில்லும் வாளும்

திருசங்கையும் கதையையும் ஸ்ரீசார்ங்கத்தையும் நந்தகவாளையும்
சேரும் மார்ப

நித்யவானம் பண்ணுகிற திருமார்பையுடைவனே!
நாதனே

ஸர்வஸ்வாமியே!
ஐயில் ஆய ஆக்கை நோய்

சிலேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரமாகிய வியாதியை
ஏந்து சீர் கைய!

தரித்துக் கொண்டிருக்கிற அழகிய திருக்கைளையுடையவனே
செய்யபோதில் மாது

செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டி
அறுத்து வந்து

தொலைத்து வந்து
நின் அடைந்து

உன்னை அடைந்து
உய்வது ஓர் உபாயம்

நான் உஜ்ஜீவிக்கும்படியானவொரு உபாயத்தை
எனக்கு

அடியேனுக்கு
நீ நல்கவேண்டும்

அருள வேணும்.

English Translation

O Lord with hands that wield the bow, the discus, dagger, conch and mace, with Lady-on-the-lotus-Peeth, a perfect match to manly chest! Pray tell me how to break the cords of birth and death in body-flesh, and come to you  with folded hands to serve your lotus feet alone

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top