(848)
வெய்யவாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்துசீர்க்
கையசெய்ய போதில்மாது சேருமார்ப நாதனே
ஐயிலாய வாக்கைநோய றுத்துவந்து நின்னடைந்து
உய்வதோரு பாயம்நீயெ னக்குநல்க வேண்டுமே.
பதவுரை
| வெய்ய ஆழி |
– |
(எதிரிகள்மேல்) தீக்ஷ்ணமான திருவாழியையும் |
| சங்கு தண்டு வில்லும் வாளும் |
– |
திருசங்கையும் கதையையும் ஸ்ரீசார்ங்கத்தையும் நந்தகவாளையும் |
| சேரும் மார்ப |
– |
நித்யவானம் பண்ணுகிற திருமார்பையுடைவனே! |
| நாதனே |
– |
ஸர்வஸ்வாமியே! |
| ஐயில் ஆய ஆக்கை நோய் |
– |
சிலேஷ்யம் முதலியவற்றுக்கு இருப்பிடமாகிய சரீரமாகிய வியாதியை |
| ஏந்து சீர் கைய! |
– |
தரித்துக் கொண்டிருக்கிற அழகிய திருக்கைளையுடையவனே |
| செய்யபோதில் மாது |
– |
செந்தாமரை மலரில் பிறந்த பிராட்டி |
| அறுத்து வந்து |
– |
தொலைத்து வந்து |
| நின் அடைந்து |
– |
உன்னை அடைந்து |
| உய்வது ஓர் உபாயம் |
– |
நான் உஜ்ஜீவிக்கும்படியானவொரு உபாயத்தை |
| எனக்கு |
– |
அடியேனுக்கு |
| நீ நல்கவேண்டும் |
– |
அருள வேணும். |
English Translation
O Lord with hands that wield the bow, the discus, dagger, conch and mace, with Lady-on-the-lotus-Peeth, a perfect match to manly chest! Pray tell me how to break the cords of birth and death in body-flesh, and come to you with folded hands to serve your lotus feet alone
