(847)
வரம்பிலாத மாயமாய வையமேழும் மெய்ம்மையே
வரம்பிலூழி யேத்திலும்வ ரம்பிலாத கீர்த்தியாய்
வரம்பிலாத பல்பிறப்ப றுத்துவந்து நின்கழல்
பொருந்துமாதி ருந்தநீவ ரஞ்செய்புண்ட ரீகனே.
பதவுரை
| வரம்பு இலாத மாய |
– |
அளவிறந்த ஸ்வரூபத்தையுடைய பிரகிருதிதத்துவத்தை ஸ்வாதீகமாகவுடையவனே |
| மாய! |
– |
ஆச்சரியசக்தியுக்தனே! |
| வையம் எழும் |
– |
ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி) |
| மெய்ம்மையே |
– |
மெய்யாகவே |
| வரம்பு இல் ஊழி |
– |
பலபல கற்பகங்கள் வரையிலும் |
| ஏத்திலும் |
– |
தோத்திரம் பண்ணினாலும் |
| வரம்பு இலாத கீர்த்தியாய் |
– |
எல்லைகாண முடியாத புகழையுடையோனே! |
| புண்டரீகனே |
– |
புண்டரீகாக்ஷனே! (அடியேன்) |
| வரம்பு இலாயா |
– |
முடிவில்லாமல் நேரக்கூடியவனான |
| பல் பிறப்பு |
– |
பற்பல ஜன்மங்களை |
| அறுத்து |
– |
இன்றோடு முடித்துவிட்டு |
| நின் கழல் வந்து |
– |
உனது திருவடிகளைக் கிட்டி |
| பொருந்தும் ஆ |
– |
அவற்றிலேயே ஸக்தனாயிருக்கும்படி |
| திருந்த |
– |
நன்றாக |
| நீ வரம் செய் |
– |
அநுக்ரஹித்தருள வேணும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “அஞ்சலென்னவேண்டுமே” என்றும் “இரங்கு அரங்கவாணனே!” என்றும் பொதுப்பட அருளிச்செய்ததை விவரியாநின்றுகொண்டு, “ஸம்ஸாரத்தை வேரறுத்து உன் திருவடிகளிலே பொருந்தும்படியாக அநுக்ரஹம் பண்ணியருளவேணும்” என்று தம்முடைய ப்ராப்யத்தை ஸ்பஷ்டமாகப் பிரார்த்திக்கிறார்.
English Translation
O Wonder-Lord of endless feats, O Lord in all, above, below! O Lord of endless ages praised in yore! Cutting the pall of endless birth, O Lotus-Lord do take to me, and bind me to your holy feet, I pray to you for this alone.
