(847)

(847)

வரம்பிலாத மாயமாய வையமேழும் மெய்ம்மையே

வரம்பிலூழி யேத்திலும்வ ரம்பிலாத கீர்த்தியாய்

வரம்பிலாத பல்பிறப்ப றுத்துவந்து நின்கழல்

பொருந்துமாதி ருந்தநீவ ரஞ்செய்புண்ட ரீகனே.

பதவுரை

வரம்பு இலாத மாய

அளவிறந்த ஸ்வரூபத்தையுடைய பிரகிருதிதத்துவத்தை ஸ்வாதீகமாகவுடையவனே
மாய!

ஆச்சரியசக்தியுக்தனே!
வையம் எழும்

ஏழுலகத்திலுமுள்ள ஜனங்களும் (கூடி)
மெய்ம்மையே

மெய்யாகவே
வரம்பு இல் ஊழி

பலபல கற்பகங்கள் வரையிலும்
ஏத்திலும்

தோத்திரம் பண்ணினாலும்
வரம்பு இலாத கீர்த்தியாய்

எல்லைகாண முடியாத புகழையுடையோனே!
புண்டரீகனே

புண்டரீகாக்ஷனே! (அடியேன்)
வரம்பு இலாயா

முடிவில்லாமல் நேரக்கூடியவனான
பல் பிறப்பு

பற்பல ஜன்மங்களை
அறுத்து

இன்றோடு முடித்துவிட்டு
நின் கழல் வந்து

உனது திருவடிகளைக் கிட்டி
பொருந்தும் ஆ

அவற்றிலேயே ஸக்தனாயிருக்கும்படி
திருந்த

நன்றாக
நீ வரம் செய்

அநுக்ரஹித்தருள வேணும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  “அஞ்சலென்னவேண்டுமே” என்றும் “இரங்கு அரங்கவாணனே!” என்றும் பொதுப்பட அருளிச்செய்ததை விவரியாநின்றுகொண்டு, “ஸம்ஸாரத்தை வேரறுத்து உன் திருவடிகளிலே பொருந்தும்படியாக அநுக்ரஹம் பண்ணியருளவேணும்” என்று தம்முடைய ப்ராப்யத்தை ஸ்பஷ்டமாகப் பிரார்த்திக்கிறார்.

English Translation

O Wonder-Lord of endless feats, O Lord in all, above, below! O Lord of endless ages praised in yore! Cutting the pall of endless birth, O Lotus-Lord do take to me, and bind me to your holy feet, I pray to you for this alone.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top