(828)

(828)

எட்டுமெட்டு மெட்டுமாயொ ரேழுமேழு மேழுமாய்

எட்டுமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனை

எட்டினாய பேதமோடி றைஞ்சிநின்ற வன்பெயர்

எட்டெழுத்து மோதுவார்கள் வல்லர்வான மாளவே

பதவுரை

எட்டும் எட்டும் எட்டும் ஆய்

இருபத்தினான்கு தத்துவங்களுக்கு நிர்வாஹகனாயும்
ஓர் ஏழும் ஏழும் ஆய்

ஸப்தத்வீபங்களுக்கும் ஸ்பத குலபர்வதங்களுக்கும் ஸ்பத ஸாகரங்களுக்கும் நிர்வாஹகனாவும்
எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற

த்வாரதசாதித்யர்களுக்கு அந்த ராத்மாவாயுமிருக்கிற
ஆதி தேவனை

பரமபுருஷனை
எட்டியைப் போதமோடு இரஞ்சி நின்று

ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணி
அவள் பெயர் எட்டு எழுத்தும்

அவ்வெம்பெருமானுக்கு வாசகமான திருவஷ்டாக்ஷரமந்த்ரத்தை
ஓதுவார்கள்

அநுஸந்திக்குமவர்கள்
வானம் ஆன வல்லர்

பரமபதத்தை ஆளவல்லவர்களாவர்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எட்டும் எட்டும் எட்டுமாய் = மூவெட்டு இருபத்தினான்கு; கருமேந்திரியங்கள் ஐந்து; ஞானேந்திரியங்கள் ஐந்து; சப்தாதி விஷயங்கள் ஐந்து; நிலம் நீர் முதலிய பூதங்கள் ஐந்து; மநஸ் , மஹாந், அஹங்காரம், ப்ரக்ருதி – ஆக இருபத்தினான்கு தத்துவங்களுண்டிறே; அந்தத் துவங்களுக்கு அந்தராத்மாவாயிருக்கும்படியைச் சொல்லுகிறது. (ஓர் ஏழும் இத்யாதி. “ஜம்பூத்வீபம் முதலிய ஏழு தீவுகளென்ன, ஏழு குலபர்வதங்களென்ன, ஏழு கடல்களென்ன இவற்றுக்கு நிர்வாஹகனென்கிறது. எட்டும் மூன்றும் ஒன்றும் கூடினால் பன்னிரண்டாம்; த்வாதசாதித்யர்களுக்கு அந்தர்யாமியானவ னென்றபடி, இப்படிப்பட்ட ஸர்வஜகத்காரணபூதனான எம்பெருமானை அஷ்டாங்க ப்ரமணாமபூர்வமாக ஆச்ரயித்துத் திரவஷ்டாக்ஷரத்தை ஓதுமவர்கள் பரமபதத்தை ஆளப்பெறுவார்களென்கிறார். எட்டினாய பேதமோடிறைஞ்சுகையாவது- “*** *** ***” என்றபடி ஸாஷ்டாங்கப்ரணாமம் பண்ணுகை. பேதம் – *** மென்ற வடசொல் விகாரம். பேதமாவது ப்ரகாரம்.

English Translation

The twenty four – the Principles, the first cause Lord is all of these and twelve, — the Adityas as well. The dear devoted worshippers who prostrate at his lotus feet, and learn his name in eight letters are rulers of the sky above.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top