(768)

(768)

ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி நாலுமூர்த்தி நன்மைசேர்

போகமூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தியெண்ணில்

மூர்த்தியாய் நாகமூர்த்தி சயனமாய்ந லங்கடல்கி டந்துமேல்

ஆகமூர்த்தி யாயவண்ண மெங்கொலாதி தேவனே.

பதவுரை

ஆதி தேவனே

ஸர்வகாரண பூதனான பெருமாளே!
ஏகமூர்த்தி ஆய்

(பரமபதநிலயனான) பரவாஸு தேவமூர்த்தியாய்
மூன்று மூர்த்தி ஆய்

ஸங்கர்ஷண, ப்ரத்யம்ந, அநிருத்தர்களாகிற மூன்று மூர்த்தியாய்
முதலாயிரம்

திருச்சந்த விருத்தம்
நாலு மூர்த்தி ஆய்

ப்ரதாகம், புருஷன், அவ்யக்தம், காலம் என்னுமிவற்றை சரீரமாகக்கொண்ட நாலு மூர்த்தியாய்
நன்மை சேர் போகம் மூர்த்தி ஆய்

விலக்ஷணமாய்ப் போகத்தக்கு அர்ஹமான மூர்த்தியாய்
புண்ணியத்தின் மூர்த்தி ஆய்

புண்யமே வடிவுகொண்டதொரு மூர்த்தியாய்
எண் இல் மூர்த்தி ஆய்

(இப்படி) எண்ணிறந்த (பல பல) மூர்த்தியாய்
நலம் கடல்

நல்ல திருப்பாற்கடலில்
காகம் மூர்த்தி சயனம் ஆய் கிடந்து

திருவனந்தாழ்வானுடைய திருமேனியைப் படுக்கையாக வுடையவனாய்க் கண் வளர்ந்தருளி
மேல்

அதுக்குமேலே
ஆக மூர்த்தி ஆய வண்ணம்

அடியார்கள் உகந்த உருவமாகிய அர்ச்சரவதாரமாய் அவதரித்த தன்மை
என் கொல்

என்னாயிருந்தது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பரவாஸுதேவ மூர்த்தியா யிருந்துகொண்டு நித்யவிபூதியை நிர்வஹித்தும், வ்யூஹம் முதலாக ஸ்தாவரஜந்மபர்யந்தமாகத் திருவவதரித்து லீலாவிபூதியை நிர்வஹித்தும் போருகிற இவை ஓரொன்றே சாஸ்த்ரங்களுக்கு அவிஷமாயிருக்க, அதுக்குமேலே* தமருகந்த தெவ்வுரு மவ்வுருவந்தானாய் ஸர்வஸுலபனாய் ஸர்வஸஹிஸ்ணுவாய் ஸர்வஜுஸமாராத்யனாய் அர்ச்சாவதார ரூபியாய்த் தன்னை அமைத்துநின்ற தன்மை என்னே! என்று அது தன்னிலே உள்குழைகின்றார்.

“மேல் ஆகமூர்த்தியாய வண்ணம் என்கொல்!”- கீழ்க்கூறிய பற்பல திருவுருவங்களை ஏற்றுக் கொண்டதுமல்லாமல் இப்படிப்பட்ட ஊர்வாத்மா பரதந்த்ரமான தொரு நிலைமையை ஏற்றுக்கொண்டவிது என்ன ஸௌலப்ப பரமகாஷ்டை! என உள்குழைகிறபடி ஆதிதேவனே! = ஜகத்துக்கெல்லாம் ஆதிகாரணமாயிருக்கிற நீ கார்யவர்க்கத்துக்குள்ளே அதிக்ஷûத்ரனாயிருப்பானொரு சேதானுடைய விருப்பத்துக்கிணங்கி நடப்பது என்ன வித்தகம்! என்று கேட்கிறபடி. (கஎ)

English Translation

O Single-form, the Three-fold form, the Four-fold form, benevolent! The joyous form, the holy form, the countless forms, O First causes Lord! The serpent form in foaming seas is couch for you to lay and be. The way you come for all to see as forms in temples, Glory-be!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top