(760)
தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்
நீதியால்வ ணங்குபாத நின்மலாநி லாயசீர்
வேதவாணர் கீதவேள்வி நீதியான வேள்வியார்
நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே
பதவுரை
| தாது உலாவு |
– |
தாதுகள் உலாவுகின்ற |
| கொன்றை மாலை |
– |
கொன்னைப்பூ மாலையையும் |
| துன்னு செம் சடை |
– |
நெருங்கிய சிவந்த சடையையுடைய |
| சிவன் |
– |
ருத்ரன் |
| நீதியால் |
– |
முறைமைப்படி |
| வணங்கு |
– |
வணங்கப்பெற்ற |
| பாத |
– |
திருவடிகளையுடையவனே! |
| நின்மலா! |
– |
நிர்மலஸ்வரூபியே! |
| நிலாய சீர்வேதம் வாணர் |
– |
நிரம்பிய குணங்களையுடைய வைதிகர்களென்ன |
| கீதம் |
– |
வேள்வியார் |
|
ஸாமகானம் மிகுந்த யஜ்ஞயாகங்களை நடத்துமவர்களென்ன |
||
| நீதி ஆன கேள்வி யார் |
– |
சிரமப்படி ச்ரவண மநநங்களை ச் செய்கிற மஹான்களென்ன (இவர்கள்) |
| நீதியால் |
– |
சாஸ்த்ரவிதிப்படி |
| வணங்கு நின்ற நீர்மை |
– |
வணங்குகைக்கு உரிய தன்மை. |
| நின் கண்ணே நின்றது |
– |
உன் பக்கலில்தான் உள்ளது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ப்ரயோஜநாந்தரபார்களில் முதல்வனான சிவனும் அநந்யப்ரயோஜநரான வைதிகோத்தமர்களும் உன்னையே ஆச்ரயிக்கக் காண்கையாலே நீயே ஸர்வ ஸாச்ரயணீயன் என்கிறார்.
English Translation
The pollen-dusted Konrai garland-wearing mat-hair Lord Siva, does offer worship at thy feet. O Lord of spotless, lasting fame! The Veda learned Saman songs and sacrifice of proper chants do go to thee and thee alone, O Lord of worship-worthy feet!
