(760)

(760)

தாதுலாவு கொன்றைமாலை துன்னுசெஞ்ச டைச்சிவன்

நீதியால்வ ணங்குபாத நின்மலாநி லாயசீர்

வேதவாணர் கீதவேள்வி நீதியான வேள்வியார்

நீதியால் வணங்குகின்ற நீர்மைநின்கண் நின்றதே

பதவுரை

தாது உலாவு

தாதுகள் உலாவுகின்ற
கொன்றை மாலை

கொன்னைப்பூ மாலையையும்
துன்னு செம் சடை

நெருங்கிய சிவந்த சடையையுடைய
சிவன்

ருத்ரன்
நீதியால்

முறைமைப்படி
வணங்கு

வணங்கப்பெற்ற
பாத

திருவடிகளையுடையவனே!
நின்மலா!

நிர்மலஸ்வரூபியே!
நிலாய சீர்வேதம் வாணர்

நிரம்பிய குணங்களையுடைய வைதிகர்களென்ன
கீதம்

வேள்வியார்

ஸாமகானம் மிகுந்த யஜ்ஞயாகங்களை நடத்துமவர்களென்ன

நீதி ஆன கேள்வி யார்

சிரமப்படி ச்ரவண மநநங்களை ச் செய்கிற மஹான்களென்ன (இவர்கள்)
நீதியால்

சாஸ்த்ரவிதிப்படி
வணங்கு நின்ற நீர்மை

வணங்குகைக்கு உரிய தன்மை.
நின் கண்ணே நின்றது

உன் பக்கலில்தான் உள்ளது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ப்ரயோஜநாந்தரபார்களில் முதல்வனான சிவனும் அநந்யப்ரயோஜநரான வைதிகோத்தமர்களும் உன்னையே ஆச்ரயிக்கக் காண்கையாலே நீயே ஸர்வ ஸாச்ரயணீயன் என்கிறார்.

English Translation

The pollen-dusted Konrai garland-wearing mat-hair Lord Siva, does offer worship at thy feet. O Lord of spotless, lasting fame! The Veda learned Saman songs and sacrifice of proper chants do go to thee and thee alone, O Lord of worship-worthy feet!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top